டெல்லி: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டித் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது. இதில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்துமே துபாயில் நடைபெறவுள்ளன.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை பாகிஸ்தான் நடத்தவுள்ளது. ஆனால் பாகிஸ்தானுக்குப் போய் விளையாட முடியாது என்று மறுத்து விட்டதால் தற்போது இந்தியா மோதும் போட்டிகள் அனைத்தும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால் பாகிஸ்தான் மற்றும் துபாயில் சாம்பியன்ஸ் டிராபி போடடிகள் நடைபெறவுள்ளன.
19 நாட்கள் நடைபெறவுள்ள இந்தப் போட்டித் தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி தொடங்கும். மார்ச் 9ம் தேதி லாகூரில் இறுதிப் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் எட்டு அணிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளன. இவற்றுக்கு இடையே 15 போட்டிகள் நடைபெறவுள்ளன. பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி, லாகூர், கராச்சியில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. ஒவ்வொரு மைதானத்திலும் தலா 3 குரூப் போட்டிகள் நடைபெறும். 2வது அரை இறுதிப் போட்டியும் லாகூரில் நடைபெறும். ஒரு வேளை இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றால் இறுதிப் போட்டி துபாயில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் அரை இறுதிப் போட்டி மற்றும் இந்தியா விளையாடும் போட்டிகள் துபாயில் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் பிப்ரவரி 19ம் தேதி பாகிஸ்தானும், நியூசிலாந்தும் கராச்சியில் மோதவுள்ளன. அனைத்துப் போட்டிகளும் பகல் இரவுப் போட்டியாக நடைபெறும்.
அணிகள் விவரம்:
ஏ பிரிவு- இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம்
பி பிரிவு - தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து
போட்டி அட்டவணை:
பிப்ரவரி 19 - பாகிஸ்தான் - நியூசிலாந்து (கராச்சி)
பிப்ரவரி 20 - இந்தியா - வங்கதேசம் (துபாய்)
பிப்ரவரி 21 - பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா (கராச்சி)
பிப்ரவரி 22 - ஆஸ்திரேலியா - இங்கிலாந்து (லாகூர்)
பிப்ரவரி 23 - இந்தியா - பாகிஸ்தான் (துபாய்)
பிப்ரவரி 24 - வங்கதேசம் - நியூசிலாந்து (ராவல்பிண்டி)
பிப்ரவரி 25 - ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா (ராவல்பிண்டி)
பிப்ரவரி 26 - ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து (லாகூர்)
பிப்ரவரி 27 - பாகிஸ்தான் - வங்கதேசம் (ராவல்பிண்டி)
பிப்ரவரி 28 - ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா (லாகூர்)
மார்ச் 1 - தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து (கராச்சி)
மார்ச் 2 - இந்தியா - நியூசிலாந்து (துபாய்)
மார்ச் 4 - முதல் அரை இறுதி (துபாய்)
மார்ச் 5 - 2வது அரை இறுதி (லாகூர்)
மார்ச் 9 - இறுதிப் போட்டி (லாகூர் அல்லது துபாய்)
மார்ச் 10 - ரிசர்வ் தினம்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!
அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!
கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!
தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
பூஜ்ஜிய நிழல் தினம்... பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!
குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம்... 9 மாவட்டங்களுக்கு அனுமதி!
{{comments.comment}}