100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா சூப்பர் வெற்றி.. இங்கிலாந்து பரிதாப தோல்வி!

Oct 29, 2023,09:58 PM IST

லக்னோ : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்தியா சூப்பரான வெற்றியை பெற்றுள்ளது. 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா. 


இந்தியா - இங்கிலாந்து  இடையிலான உலகக் கோப்பை போட்டி லக்னோவில் உள்ள ஏகனா ஸ்டேடியத்தில் இன்று நடந்தது. முதலில் பேட் செய்த இந்தியா பெரும் தடுமாற்றத்துடன் விளையாடியது. இங்கிலாந்து வீரர்கள் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினர். இதனால் பெரியஸ்கோரை எட்ட முடியாமல் 229 ரன்களை மட்டுமே இந்தியாவால் எடுக்க முடிந்தது. கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பாக ஆடி அணியின் மானத்தைக் காப்பாற்றினார். சூரிய குமார் யாதவ் கடைசி நேரத்தில் கை கொடுத்ததால் இந்தியா கெளரவமான ஸ்கோரை எட்ட முடிந்தது.




அதைத் தொடர்ந்து இங்கிலாந்து தனது சேசிங்கைத் தொடங்கியது. ஆனால் இங்கிலாந்தின் பேட்டிங் வரிசையை இந்திய பந்து வீச்சாளர்கள் முறியடித்து விட்டனர்.   குறிப்பாக முகம்மது ஷமியும், பும்ராவும் அசத்தினர். பேர்ஸ்டோவை ஷமி வெளியேற்ற, அடுத்து அதிரடி காட்டினார் பும்ரா. 2 பந்துகளில் டேவிட் மலன், ஜோ ரூட் ஆகிய இருவரையும் அடுத்தடுத்து வெளியேற்றி இங்கிலாந்தை நிலை குலைய வைத்து விட்டார். தொடர்ந்து பென் ஸ்டோக்ஸும் டக் அவுட் ஆகி ஷமி பந்தில் வெளியே இங்கிலாந்து முற்றிலும் சீர்குலைந்து விட்டது.


லியாம் லிவிங்டன் சற்று நிதானித்து ஆடி அணியின் ஸ்கோர்  100ஐத் தொட உதவினார். ஆனாலும் இந்தியாவின் பந்து வீச்சு தொடர்ந்து சிறப்பாக தொடரவே, இங்கிலாந்தால் மீண்டு வர முடியவில்லை.  கடைசியில் வெறும் 129 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து. இதன் மூலம் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றியைப் பெற்றது.  இது இந்தியாவுக்கு தொடர்ச்சியான 6வது வெற்றியாக அமைந்துள்ளது.






2023 ம் ஆண்டிற்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 48 போட்டிகள் கொண்ட இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை 28 போட்டிகள் நிறைவடைந்து உள்ளன. இன்று நடந்தது 29 வது போட்டியாகும்.


100வது போட்டியில் ரோஹித் அபாரம்


இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்ற பிறகு ரோகித் சர்மா பங்கேற்கும் 100 வது போட்டி இதுவாகும். இதனால் இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மாவின் ஆட்டத்தில் அனல் பறந்தது. கூடவே வெற்றியும் கை கூடியுள்ளது.  இந்தப் போட்டியில் இந்தியாவின் ஸ்கோர் கெளரமான நிலையை எட்ட ரோஹித் சரம்மாவின் சிறப்பா பேட்டிங்கும் முக்கியக் காரணம்.


நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா இதுவரை  ஒருமுறை கூட தோற்கவில்லை. மேலும் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்து விட்டது. இந்தியாவுக்கு இன்னும் 3 போட்டிகள் உள்ளன. அதிலும் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.


மறுபக்கம் நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து மிகப் பரிதாபமாக 10வது இடத்தில் அதாவது கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி அரை இறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை முற்றிலும் இழந்து விட்டது. இதுவரை 6 போட்டிகளில் ஆடிய இங்கிலாந்து  ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற 5 போட்டிகளிலும் தோல்வியையே தழுவியது. இதனால் நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் அது தனது கோப்பையை தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பை நழுவ விட்டு விட்டது.  மிக மோசமான முறையில் இங்கிலாந்து இந்தத் தொடரில் ஆடியது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்