"எதுவும் சரியில்லை.. கவர்னரிடம் ஆட்சியைக் கலைக்கச் சொல்லிட்டேன்".. நிதீஷ்குமார்!

Jan 28, 2024,06:07 PM IST

பாட்னா: ஆளுநரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்த நிதீஷ்குமார், தனது ஆட்சியைக் கலைக்குமாறு ஆளுநருக்குப் பரிந்துரைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.


கடந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் பாஜகவுடன் மீண்டும் சேருவதற்குப்  பதில் செத்துப் போகலாம் என்று ஆவேசமாக கூறியிருந்தார் நிதீஷ் குமார். ஆனால் இந்த ஜனவரியில் மீண்டும் பாஜகவுடன் கை கோர்க்க தீர்மானித்து விட்டார்.


ராஷ்டிரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸுடன் இணைந்து அவர்களின் ஆதரவுடன் ஆட்சியில் இருந்து வந்த நிதீஷ் குமார், இப்போது அந்தப்ப பதவியை உதறி விட்டார். தற்போது பாஜக ஆதரவுடன் மீண்டும் அவர் ஆட்சியமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.




இன்று முற்பகல் ஆளுநரைச் சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்த பின்னர் செய்தியாளர்களிடம் நிதீ்ஷ் குமார் பேசுகையில், கூட்டணியில் எதுவும் சரியாக இல்லை. சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் ஆட்சியை முடித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆளுநரைச் சந்தித்து எனது  பதவி விலகலைத் தெரிவித்து விட்டேன். ஆட்சியைக் கலைக்கவும் பரிந்துரைதுள்ளேன். மகா கூட்டணியின் ஆட்சி முடிந்து விட்டது.


நான் அனைவருடனும் ஆலோசித்த பின்னர்தான் இந்த முடிவை எடுத்தேன். அனைவரின் கருத்தையும் காது கொடுத்துக் கேட்டேன். ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது என்றார் நிதீஷ் குமார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்