புதிய தலைமுறை விவாதத்திற்கு நான் போகவில்லை.. நாராயணன் திருப்பதி அறிவிப்பு

Jan 05, 2023,11:38 AM IST

சென்னை: புதிய தலைமுறை விவாத நிகழ்ச்சிக்கு தான் போகப் போவதில்லை என்று தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி  அறிவித்துள்ளார்.


சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அப்போது அவருக்கும், புதிய தலைமுறை செய்தியாளர் முருகேசனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த மோதலைத் தொடர்ந்து, புதிய தலைமுறை விவாதத்திற்கு நாராயணன் திருப்பதி வருவார் என்று அண்ணாமலை அறிவித்திருந்தார்.


இந்த சவாலை புதிய தலைமுறையும் ஏற்றுக் கொண்டது. ஆனால் தற்போது அதில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டு தான் போகப் போவதில்லை என்று நாராயணன் திருப்பதி  அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள ட்வீட்:




நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் @PTTVOnlineNews  தொலைக்காட்சியின் அழைப்பை ஏற்று பி ஜி ஆர் முறைகேடுகள் குறித்த ஆவணங்களை வெளியிட்டு அது குறித்து மக்களிடம் தெளிவுபடுத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை   என்னை  பணித்திருந்தார். இன்று மாலை  7மணிக்கு நேரலையில் இந்த நிகழ்ச்சியை (ஒளிபரப்புவதாக புதிய தலைமுறையின் ஆசிரியர் என்னிடம் கூறியிருந்த நிலையில், திடீரென்று நேற்று இரவு இந்த நேரலை நிகழ்ச்சியை நடத்த முடியாது என்றும், அதற்கு பதிலாக  இந்த விவகாரத்தில் மற்ற கட்சிகள் கலந்து கொள்ளும் விவாத நிகழ்ச்சியையே நடத்த புதிய தலைமுறை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது என்றும் கூறினார்.

ஆனால், புதிய தலைமுறை செய்தியாளரின் சவாலை ஏற்று ஆவணங்களை வெளியிட்டு அது குறித்த விளக்கத்தை மக்களுக்கு அளித்த பின்னர் எந்த நிகழ்ச்சியையும் அவர்கள் நடத்தி கொள்ள நமக்கு மறுப்பேதும் இல்லை என்று நான் கூறினேன். ஆனால், மக்களிடம் நேரடியாக பி ஜி ஆர் முறைகேடுகள்
குறித்த விளக்கத்தை பாஜக அளிக்க புதிய தலைமுறை மறுத்து விட்டது.

பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் புதிய தலைமுறையின் சவாலை ஏற்று கொண்டு ஆவணங்களை தயாராக வைத்திருந்தும், நான் நிகழ்ச்சியில் பங்கேற்க தயாராக இருந்தும், புதிய தலைமுறையின் இந்த மாற்றத்திற்கு காரணம் ஆளும் கட்சியின் அச்சுறுத்தலா அல்லது முறைகேடுகளை பாஜக அம்பலப்படுத்தி விடுமோ என்ற தயக்கமா என்பது புரியவில்லை. 

எது எப்படியிருந்ததாலும் லஞ்சம், ஊழல், முறைகேடுகளை தடுத்து ஒழிக்க  அண்ணாமலை அவர்களின் தலைமையில் நாம் உறுதியாக உள்ளோம்.  புதிய தலைமுறை தொலைக்காட்சி முறைகேடுகள் குறித்த ஆவணங்களை மக்களிடம் வெளிப்படுத்த தயாராக இல்லாததால் இன்றைய நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்