சென்னை: வானில் பறக்கும் உன் அரசியல் கொடி. உன் வெற்றிக்கு இதுவே முதல் படி. ஏற்கனவே நான் CM (celebrity mother) இப்போ நான் PM (proud mother) என்று விஜய்யின் அம்மா ஷோபா நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
தவெக கட்சியின் தலைவர் விஜய் கடந்த பிப்ரவரியில் தனது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியினை தொடங்கினார். 2026ம் ஆண்டு வரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாகை சூட வேண்டும் என்பதற்காக அடுத்தடுத்த கட்சி பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார். கட்சியின் அடுத்த படியாக இன்று விஜய் தனது தவெக கட்சியின் கொடியினை அறிமுகம் செய்தார். இந்த கொடி அறிமுகத்திற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்னோட்டமாக மஞ்சள் நிறத்தில் விஜய் முகம் பொறித்த கொடி பறக்க விடப்பட்டது.
இன்று கொடி அறிமுகம் செய்யப்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னரே தெரிவித்திருந்தார் தவெக தலைவர். அதன்படி இன்று கொடி அறிமுக நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் தாய், தந்தை மற்றும் ஏராளமான கட்சி தொண்டர் என பலர் கலந்து கொண்டனர். விஜய் அறிமுகம் செய்து வைத்த கட்சி கொடிக்கு ஆதரவாக பலர் இணையதள பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சிலர் எதிர் மறையான பதிவுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் பேசுகையில்,இப்போது போல எப்போதும் உண்மையா இரு விஜய். நீ நாட்டுக்கே ராஜா ஆனாலும் எனக்கு பிள்ளை. தமிழ் மொழியின் பாரம்பரியம் போற்று. பெண்ணியம் காப்பாற்று. புரட்சிகர திட்டங்கள் தீட்டு. வானில் பறக்கும் உன் அரசியல் கொடி. உன் வெற்றிக்கு இதுவே முதல் படி. ஏற்கனவே நான் CM (celebrity mother) இப்போ நான் PM (proud mother) என்று பேசியுள்ளார் ஷோபா சந்திரசேகர்.
இன்று நடந்த கொடி அறிமுக விழாவில் ஷோபா சந்திரசேகர் மிகுந்த பெருமையுடன், முகம் நிறைய பெருமிதத்துடன் பூரிப்புடன் மகனின் அரசியல் பிரவேசத்தைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தார். மேலும் கட்சியின் பாடல் சூப்பராக இருப்பதாகவும் அவர் புஸ்ஸி ஆனந்த்தைப் பார்த்து தம்ப்ஸ் அப் காட்டி மகிழ்ந்தார் என்பது நினைவிருக்கலாம்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}