ஆட்சியை இழந்த ஜெகன் மோகன் ரெட்டியின்.. வீட்டின் முன்புறம் இடிப்பு.. ஹைதராபாத் மாநகராட்சி அதிரடி!

Jun 15, 2024,05:10 PM IST

ஹைதராபாத்: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டின் முன்புறம் கட்டப்பட்டிருந்த கட்டடங்களை இன்று ஜேசிபி இயந்திரம் மூலம் அதிகாரிகள் இடித்துத் தள்ளினர்.


இந்தக் கட்டடங்கள் சட்டத்திற்குப் புறம்பான வகையில் விதிகளை மீறி கட்டப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் ஆட்சியை இழந்துள்ள  நிலையில் ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டுக்கு ஜேசிபி இயந்திரங்கள் வந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




சம்பவம் நடந்த ஹைதராபாத் நகரமானது, தெலங்கானா மாநிலத் தலைநகராக இருந்தாலும் கூட இது திட்டமிட்ட அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல், சந்திரபாபு நாயுடுவின் தூண்டுதலின் பேரில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இதைச் செய்திருப்பதாக ஜெகன் மோகன் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.


ஹைதராபாத் நகரின் லோட்டஸ் பான்ட் பகுதியில் ஜெகன் மோகன் ரெட்டி வீடு உள்ளது. இந்த வீட்டின் முன்புறம் சில கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவை முதல்வரின் பாதுகாப்பு ஊழியர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டவையாகும். அதாவது ஜெகன் மோகன் முதல்வராக இருந்த போது கட்டப்பட்டவை. ஆனால் இவை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளன, சட்ட விதிகளுக்குப் புறம்பாக கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் என்று தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வந்தன.




இருப்பினும் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இருந்தவரை இதுகுறித்து ஹைதராபாத் மாநகராட்சி கண்டு கொள்ளாமல் இருந்தது. தற்போது ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை இழந்துள்ள நிலையில் இன்று ஜேசிபி இயந்திரங்களோடு வந்து இந்த கட்டடங்களை அதிகாரிகள் இடித்துத் தள்ளி விட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்