மனைவிக்கு பிறந்த வீட்டார் தரும் சீதனத்தில்.. கணவனுக்கு உரிமை இல்லை.. உச்சநீதிமன்றம் பொளேர்!

Apr 27, 2024,05:11 PM IST

டெல்லி: மனைவிக்கு அவரது வீட்டின் சார்பில் சீதனமாக வழங்கப்படும் சொத்தில், கணவனுக்கு எந்த உரிமையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


முன்னர் எல்லாம் திருமணம் என்பது இரு மனங்கள் சம்மந்தப்பட்டது என்று கூறி வந்தனர். ஆனால் இன்றைய காலத்தில் திருமணத்தில் முக்கிய பங்காக வரதட்ணை உள்ளது. யார் அதிகளவில் வரதட்சணை தருகிறார்களோ அதை வைத்து தான் இன்றைய பெரும்பாலான திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. இவ்வாறாக நடைபெறும் திருமணங்களில் கணவன் மனைவிக்கிடையே சண்டை சச்சரவுகள்  அதிகரிக்கின்றன.  இதன் காரணமாக விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் குவிந்து வருகின்றன. 


இப்படிப்பட்ட நிலையில், ஒரு முக்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:




2009ம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்த போது, பெற்றோர்களால் எனக்கு சீதனமாக வழங்கப்பட்ட ரூ.90 லட்சம் மதிப்பிலான நகைகளை எனது கணவர் எடுத்துக் கொண்டார். அதை திருப்பித் தர உத்தரவிட  வேண்டும் என்று கூறி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரியான ஆதாரங்கள் இல்லை என்று தீர்ப்பளித்து எனது கோரிக்கையை நிராகரித்து விட்டார். அந்த தீர்ப்பை ரத்து செய்து எனக்கு எனது சீதன நகையை திரும்ப தர உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். 


அந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபாங்கர் தத்தா ஆகியோர் விசாரித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பின்னர் பிறப்பித்த உத்தரவில், மனைவி சீதனமாக எடுத்து வரும் சொத்து, கணவரின் சொத்தாக மாறாது. அதில் அவருக்கு எந்த உரிமையும் இல்லை. மாறாக, அவசர தேவைக்கு அந்த சொத்தை அவர் பயன்படுத்தியிருந்தால், அதை திருப்பி தர வேண்டியது கணவரின் தார்மீக கடமையாகும்.

இந்த வழக்கில், பெண்ணின் நகைகளை பயன்படுத்திய கணவர் , அதற்கு ஈடாக ரூ.25 லட்சம் மனைவிக்கு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்தத் தீர்ப்பு பெண்களுக்கு மிகப் பெரிய உத்வேகம் அளிக்கும் என்று தெரிகிறது. மனைவி என்ற ஒரே காரணத்துக்காகவே பெண்களை அடிமைப்படுத்தி அவர்களது பணம், நகை, உழைப்பு, சொத்து என எல்லாவற்றையும் உறிஞ்சிக் குடிக்கும் கணவர்களுக்கு இது சம்மட்டி அடியாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்