சென்னை: எப்போதும் அரிசியே சேர்க்காமல் அவ்வப்போது சிறு தானியங்களையும் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நல்லது. அந்த வகையில் குதிரைவாலி அரிசி பாசிப் பருப்பு பொங்கல் செய்து சாப்பிட்டால் செம டேஸ்ட்டாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
குதிரைவாலி அரிசி ஒரு கப்
பாசிப்பருப்பு ஒரு கப்
சீரகம் மிளகு தலா ஒரு ஸ்பூன்
பூண்டு ஆறு பல் உரித்தது
நெய் ஒரு ஸ்பூன்
முந்திரி பத்து
கருவேப்பிலை ஒரு கொத்து
மா இஞ்சி சிறிதளவு பொடியாக கட் செய்தது
பெருங்காயம் சிறிதளவு
பச்சை மிளகாய் இரண்டு
உப்பு தேவைக்கு ஏற்ப
செய்முறை
1. குதிரைவாலி அரிசி பாசிப்பருப்பு இரண்டையும் நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
2. குக்கரில் நான்கு கப் தண்ணீர் ஊற்றவும். குதிரைவாலி அரிசி& பாசிப்பருப்பு சேர்க்கவும். (குறிப்பு: அரிசியை எந்த கப்பில் அளந்தோமோ அதே கப்பில் தண்ணீர் ஊற்றவும்)
3.பிறகு பூண்டு, சீரகம் ,மிளகு, பெருங்காயம், பச்சை மிளகாய் ,சிறிது கருவேப்பிலை சேர்க்கவும்
4. மூன்று விசில் வந்ததும் , குக்கர் பிரஷர் அடங்கிய பிறகு, நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து, பொங்கலில் கலக்கி இறக்கவும். சுவையான குதிரைவாலி பொங்கல் ரெடி.
சட்னி : மா இஞ்சி மல்லித்தழை சட்னி செய்ய தேங்காய் துருவல் ஆறு ஸ்பூன், மூன்று ஸ்பூன் வறுகடலை, பச்சை மிளகாய் 3, மா இஞ்சி ஒரு துண்டு, மல்லித்தழை ஒரு கைப்பிடி அளவு ,உப்பு தேவைக்கு ஏற்ப சேர்த்து மிக்ஸி ஜாரில் நன்றாக அரைக்கவும். நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, சீரகம் போட்டு தாளிக்கவும்.
அருமையான மாஇஞ்சி மல்லித்தழை சட்னி& குதிரைவாலி அரிசி பொங்கலுடன் சாப்பிட ரொம்ப டேஸ்ட்டாக இருக்கும் .ஹெல்தியான உணவும் கூட.
அனைத்து வயதினரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கர்ப்பிணி பெண்கள் டயாபடீஸ் இருப்பவர்கள் அனைவருக்கும் அருமையான உணவு. நல்ல பில்லிங்கான சுவையான பொங்கல் செய்து பாருங்கள் பிரண்ட்ஸ்
மேலும் இது போன்ற சுவையான ரெசிபிகளுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு
தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!
வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!
Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!
Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..
அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!
கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!
டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!
தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!
{{comments.comment}}