தால் ஏரியில் பற்றி எரிந்த படகுகள்.. வேகமாக பரவிய தீயில் சிக்கி ஹவுஸ் போட்டுகள் நாசம்!

Nov 11, 2023,05:51 PM IST

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே உள்ள தால் ஏரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹவுஸ் போட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி பல படகுகள் நாசமாகின. ஒரு படகில் ஏற்பட்ட தீவிபத்தால் மற்ற படகுகளுக்கும் தீ பரவி இந்த சம்பவம் நடந்துள்ளது.


நேற்று இரவு தால் ஏரியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஹவுஸ் போட்டில் தீவிபத்து ஏற்பட்டது. இந்தத் தீயானது அருகில் இருந்த பிற ஹவுஸ் போட்டுகளுக்கும் பரவியது. இதையடுத்து ஏரியில் நிறுத்தப்பட்டிருந்த பல படகுகளும் பற்றி எரிய ஆரம்பித்தன.


இந்த படகுகள் தீப்பற்றி எரிந்ததைப் பார்க்கும்போது ஏரியே தீயில் எரிவது போல காட்சி அளித்தது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதாக தெரியவில்லை.




தீ எப்படி பரவியது என்று தெரியவில்லை. கேஸ் சிலிண்டர் வெடித்திருக்கலாம் அல்லது மின்சாரக் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஆரம்பமே அமர்க்களமா இருக்கே.. விஜய் கட்சியின் கட் அவுட்கள் ஒரு நல்ல தொடக்கம்.. செல்வப்பெருந்தகை

news

வி. சாலை எல்லையில்.. இரு கைகளையும் விரித்தபடி.. இதய வாசல் திறந்து வைத்து காத்திருப்பேன்.. விஜய்

news

Sprituality: வீட்டில் செல்வம் சேர.. விளக்கேற்றி வழிபடும்போது.. தவறாமல் இந்த மந்திரத்தை சொல்லுங்க!

news

Gold Rate: வியாழக்கிழமை குறைந்திருந்த தங்கம் இன்று மீண்டும் உயர்ந்தது... எவ்வளவு தெரியுமா?

news

Deepavali Special Story: இப்பெல்லாம் யாருங்க துணி எடுத்து தைக்கிறாங்க.. நலிவடையும் சிறு டெய்லர்கள்!

news

தீவிர புயலாகவே கரையைக் கடந்தது.. டானா.. தமிழ்நாட்டிலும் ஒரு சில இடங்களில்.. இன்று மழைக்கு வாய்ப்பு!

news

அக்டோபர் 25 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

சிம்ம ராசிக்காரர்களே... பெயர், புகழ் அதிகரிக்கும் நாள்

news

ஓய்வு பெறுகிறார் நீதிபதி டிஒய் சந்திரசூட்.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்