ஆளெடுப்பும் குறைந்தது.. வேலையை விட்டுப் போவதும் குறைஞ்சிருச்சு!

Apr 18, 2023,11:19 AM IST
டெல்லி: வேலைக்கு ஆளெடுப்பதை பல்வேறு நிறுவனங்கள் குறைத்துக் கொண்டுள்ளதால், இருக்கிற  வேலையை விட்டு போவோரின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறதாம்.

இந்தியாவில் ஜனவரி - மார்ச் மாத காலகட்டத்தில் வேலைக்கு ஆள் எடுப்பது 53 சதவீத அளவு என்ற நிலையில் இருந்தது.  இதுவே அதற்கு முந்தைய அக்டோபர் 2022 -  டிசம்பர் மாத காலகட்டத்தில் 64 சதவீத அளவுக்கு இருந்தது.

ஐடி துறையில் தற்போது ஒரு விதமான நிலையற்ற தன்மை காணப்படுகிறது. பிற துறைகளிலும் கூட இதே நிலைதான். இதனால் வேலைக்கு ஆள் எடுப்பதை பெரிய பெரிய நிறுவனங்கள் குறைத்துக் கொண்டுள்ளன. மிகவும் எச்சரிக்கையுடன் இந்த விவகாரத்தில் நடக்க அவை தீர்மானித்துள்ளன. ஹெல்த்கேர் உள்ளிட்ட சில துறைகளில் ஆளெடுப்பு அதிகம் உள்ளது. ஆனால் பெரும்பாலான துறைகளில் அது குறைந்து விட்டதாக இன்டீட் இன்தியா என்ற நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு தலைவர் சசிக்குமார் தெரிவித்துள்ளார்.




வேலைக்கு ஆள் எடுப்போர் குறைந்துவிட்டதால் வேலை தேடுவோரும் குறையத் தொடங்கியுள்ளனர். தற்போதைய வேலையிலேயே தொடர பலரும் முடிவெடுத்துள்ளனர். புதியவேலைக்கான தேடல் இருந்தாலும் கூட வேலையை விடுவது குறைந்துள்ளது. 

இந்தியாவைப் பொறுத்தவரை வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறையில்தான் வேலைக்கு ஆள் எடுப்பது அதிகமாக உள்ளது. அதாவது 71 சதவீதமாக இது உள்ளது. இதற்கு அடுத்து ஹெல்த்கேர் (64%). 3வது இடத்தில் ரியல் எஸ்டேட் 57 சதவீத ஆளெடுப்புடன் உள்ளது.

அதேசமயம், மீடியா துறையில் ஆளெடுப்பது 49 சதவீதமாக இறங்கி விட்டது. ஐடி துறை இன்னும் மோசம். வெறும் 29 சதவீத அளவுக்கே ஆளெடுப்பு நடக்கிறது. உற்பத்திப் பிரிவு 39 சதவீதமாக உள்ளது. புதிதாக வேலையில் சேர விரும்புவோர் பலரும் அலுவலகம் வந்து வேலை பார்க்க விரும்புவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.  அதாவது 57 சதவீதம் பேர் அலுவலகம் வர விரும்புகிறார்களாம்.

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்