புதிய கல்வி கொள்கை மகாராஷ்டிராவில் அமல்... இனி இந்தி மொழி பாடம் கட்டாயம்!

Apr 17, 2025,12:11 PM IST

மும்பை: புதிய கல்வி கொள்கையை மகாராஷ்டிராவில் அமல்படுத்தியது பாஜக கூட்டணி அரசு.


பள்ளிக் கல்விக்கான தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைகளின்படி வடிவமைக்கப்பட்ட புதிய பாடத்திட்ட கட்டமைப்பின் கட்ட வாரியான அமலாக்கத் திட்டத்தை மாநில பள்ளிக் கல்வித் துறை ஏப்ரல் 16ல் அறிவித்தது. 


மகாராஷ்டிரா முழுவதும் மராத்தி மற்றும் ஆங்கில வழி பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 3வது மொழியாக இந்தி கற்பிக்கப்பட உள்ளது. 


1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3வது மொழியாக இந்தி கற்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கை படி அனைத்து ஆசிரியர்களும் பயிற்றுவிக்கப்படுவார்கள் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.




இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில அரசு வெளியிட்ட அரசு ஆணையில், தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை ஏற்று புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் மற்ற மொழி வழிப் பள்ளிகள் ஏற்கனவே 3 மொழித் திட்டத்தைப் பின்பற்றி வருகின்றன. ஏனெனில் மராத்தி மற்றும் ஆங்கிலம் கட்டாயமாக உள்ளன. எனவே இது தானாகவே 3 மொழிகளை உள்ளடக்கியதாகிறது. மராத்தி மற்றும் ஆங்கில மொழி வழிப் பள்ளிகளில் இரண்டு மொழிகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டு வந்தன. இனி இந்தி மொழியும் சேர்க்கப்படும். இந்த புதிய கொள்கை 2025 முதல் அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.. கொசுவைப் பிடிச்சு.. இந்தப் பொண்ணோட ஹாபி என்ன தெரியுமா?

news

Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!

news

அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!

news

கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

பூஜ்ஜிய நிழல் தினம்... பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்