கொட்டும் மழை.. நனைந்தபடி பள்ளி வந்த பிள்ளைகள்.. பாவப்பட்ட செங்கல்பட்டு மாணவர்கள்!

Nov 30, 2023,08:39 AM IST
சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் விடுமுறை விடப்படவில்லை. ஆனால் தற்போது சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் மாணவர்கள் மழையில் நனைந்தபடி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதையொட்டியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்குகிறது. இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தைத் தவிர மற்ற நான்கு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.




இந்த நிலையில் நேற்று இரவுக்கு மேல் சற்று ஓய்ந்த மழை காலையிலிருந்து மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது செங்கல்பட்டு மாவட்ட பள்ளிப் பிள்ளைகள்தான். இந்த மாவட்டத்துக்கு விடுமுறை விடப்படாத காரணத்தால் காலையிலிருந்து கொட்டும் கன மழையில் நனைந்தபடி பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, சேலையூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

இதேபோல செங்கல்பட்டிலும் ரயில் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த மாவட்டத்துக்கும் சேர்த்தே விடுமுறை விட்டிருக்கலாம் என்று பெற்றோர்கள் புலம்புகின்றனர். நேற்று இரவு,  முதலில் விடுமுறை விடப்பட்டதாக செய்தி வந்தது. ஆனால் சில நிமிடங்களில் வழக்கம் போல பள்ளிகள் இயங்கும் என்று தகவல் வெளியானது. தற்போது  மழையில் நனைந்தபடி பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதால் பார்ப்போர் பரிதாபப்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் உயர்ந்து வரும் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.55,000த்தை கடந்தது!

news

ஏழு கொண்டலவாடா.. திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படம்.. தடுக்க பவன் கல்யாண் தரும் ஐடியா!

news

வந்தாச்சு அறிவிப்பு.. விக்கிரவாண்டியில் அக். 27ல் முதல் மாநில மாநாடு.. புதிய பாதை அமைப்போம்.. விஜய்

news

செப்டம்பர் 20 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மீன ராசிக்காரர்களே.. வேகத்தை குறைத்து விவேகமாக செயல்பட வேண்டிய காலம்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

அதிகம் பார்க்கும் செய்திகள்