மும்பையில் கனமழையினால் கடும் பாதிப்பு.. 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பாம்.. வானிலை மையம்

Jul 12, 2024,02:52 PM IST

மும்பை:   மும்பையில் கனமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


தென்மேற்கு பருவ மழை தற்போது தீவிரமடைந்து வருவதால் மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மும்பையில் மட்டும் ஒரே நாளில் 30 செ.மீட்டருக்கும்  அதிகமாக மழை பெய்துள்ளதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பட்டுள்ளது. சாலைகளிலும் மழை நீர் தேங்கியதால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.கனமழை காரணமாக மும்பை  விமான நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.




இந்த கனமைழ காரணமாக ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் சாய்ந்துள்ளன. மின்சாரமும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, செம்பூர், பிடி மெல்லோ ரோடு, ஏபிஎம்சி மார்க்கெட், டர்பே மாஃப்கோ மார்க்கெட், கிங்ஸ் சர்க்கிள் போன்ற பகுதிகளில் மழைநீர் அதிகமாக தேங்கியுள்ளது. சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மும்பையில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள புயல் சூழல் காரணமாக வடக்கு ஆந்திர கடலோர பகுதி, கொங்கன், கோவா, மத்திய மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, மாஹே, ஏனாம், கர்நாடகாவின்  உள்ள முக்கிய பகுதிகளிலும் அடுத்த மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பை, தானே, பால்கர் மற்றும் கொங்கன் ஆகிய பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்