மீனவர்களுக்கு எச்சரிக்கை.. கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும்.. 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

May 23, 2024,09:53 PM IST

சென்னை:  தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச கூடும் என்பதால் அடுத்த மூன்று நாட்கள் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


அக்னி நட்சத்திர காலகட்டம் என்றாலே அய்யோ இந்த வெயிலை எப்படித்தான் சமாளிக்க போகிறோமோ என புலம்பும் மக்கள் மத்தியில் பருவம் தவறி  தற்போது தமிழ்நாடு முழுவதும் பரவலாக கோடை மழை கொட்டி தீர்த்து வருகிறது. இது மட்டுமல்லாமல் தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது நாளை காலை வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து மத்திய வங்க கடல்  பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். இதனால் தமிழ்நாட்டில் அநேக இடங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்து இருந்தது.


இந்த நிலையில் மன்னார் வளைகுடா பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், கேரளா கடலோரப் பகுதிகள், கேரள கர்நாடகா கடல் பகுதிகள், மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகள் அதனை ஒட்டிய மத்திய வங்க கடல் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு சூறாவளி காற்று வீச கூடும்.குறிப்பாக மே 23ஆம் தேதி முதல் மே 26 ஆம் தேதி வரை வங்கக் கடலில் வட திசையில் சூறாவளி காற்று வீச கூடும். இதனால்  கடலோரப் பகுதிகளுக்கு அடுத்த மூன்று நாட்கள் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என  அறிவுறுத்தப்பட்டுள்ளது.




இன்று மிக கனமழை:


தேனி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இன்று கனமழை:


ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


கன்னியாகுமரியில் செம மழை: 


கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கன மழை வெளுத்து வாங்கியது. அங்கு கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் கன்னியாகுமரியில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக திற்பரப்பு அருவியில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மூன்றாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 


கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மைலாடியில் 14 சென்டிமீட்டர் மழை பதிவானது. குருந்தன் கோட்டில் 9 சென்டிமீட்டர், கொட்டாரம், தக்கலை மாம்பழதுறையாறில் தலா 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்