சென்னை: தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் கனமழைக்கும், ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்றும் இன்றும் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. ராமநாதபுரத்தில் 11 சென்டிமீட்டர் மழையும், விருதுநகர், திருநெல்வேலி, திருவாரூர், ஆகிய மாவட்டங்களில் தலா 9 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை முதல் சீர்காழி, வத்தலகுண்டு, நாகை, திருக்கோவிலூர், ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. அதேபோல் சென்னை உள்ளிட்ட வட தமிழக பகுதிகளிலும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. இந்த திடீர் மழையால் கடந்த இரண்டு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. வெயில் குறைந்து குளுமையான சூழல் நிலவு வருகிறது.
இந்த நிலையில், பூமத்திய ரேகையை ஒட்டிய மேற்கிந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் இருந்து தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதேபோல் குமரி கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி
இன்று கனமழை:
கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இன்று மிதமான மழை:
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மழை:
சென்னையில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
13.3 2025 முதல் 18.3.2025 வரை:
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மத்திய அரசு மீதான விமர்சனத்தை மறைக்கக் கூட பெரியார்தான் உதவுகிறார்.. விஜய் பலே அறிக்கை!
எல்லாமே பொய்.. மோகன்பாபு மீதான புகார்களை முற்றாக நிராகரிக்கிறேன்.. செளந்தர்யா கணவர் விளக்கம்!
செளந்தர்யா விபத்தில் மரணிக்கவில்லையா.. கொலை செய்யப்பட்டாரா?.. புதிய புகாரால் திடீர் பரபரப்பு
வத்தலகுண்டு அருகே அமையவிருந்த டோல்கேட்... அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!
நிறைய மொழிகள் கத்துக்கலாம்.. தப்பில்லை.. எனக்கு 8 மொழிகள் பேசத் தெரியும்.. சொல்கிறார் சுதா மூர்த்தி
புதுச்சேரி முதல்வரின் சூப்பர் அறிவிப்பு.. மகளிர் உதவித் தொகை ரூ.1000ல் இருந்து ரூ.2500 ஆக உயர்வு!
கார் வாங்க போறீங்களா.. பார்க்கிங் செய்ய இடம் இருக்கா?.. சென்னையில் போக்குவரத்து ஆணையம் அதிரடி!
என் கணவர் படத்திற்கு மட்டும்.. ஏன் இவ்வளவு கடுமையான விமர்சனம்.. நடிகை ஜோதிகா ஆதங்கம்!
குளுகுளு வானிலை.. தமிழ்நாட்டில் கனமழைக்கும், மிதமான மழைக்கும் வாய்ப்பு..!
{{comments.comment}}