கோவை: பில்லூர் அணையில் இருந்து விநாடிக்கு 6000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து , கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கோடை மழை தற்போது தமிழகம் முழுவதிலும் பரவலாக பெய்து வருகிறது. இந்த கன மழை காரணமாக கோடைகாலமா? மழை காலமா? என்ற ஐய்யம் ஏற்படும் அளவிற்கு தற்போதைய கிளைமேட் உள்ளது. தொடர் கனமழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த பில்லூர் அணைக்கு நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது. இந்த நீர் வரத்தால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுள்ளது.
பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு 100 அடியாக உள்ள நிலையில், தற்போது அதன் நீர்மட்டம் 94.5 அடியாக உயர்ந்துள்ளது. அதில் 40 அடி சேறும், சகதியுமாகவே இருக்கும். முன்னர் எல்லாம் பில்லூர் அணையில் இருந்து மின் உற்பத்திக்கு நீர் திறந்து விடப்படும். கோடை காலத்தில் வெயில் அதிகமாகி நீர் மட்டம் குறைந்ததினால் நீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோடை மழை வெளுத்து வாங்கி வருவதால், அணையின் நீர் மட்டம் மடமட வென உயர்ந்தது.
இதை அடுத்து பில்லூர் அணை திறக்கப்பட்டுள்ளது. அதுவும் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பவானி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து , தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்ற வெள்ள அபாய எச்சரிக்கை விடபப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தேக்கம்பட்டி, ஓடந்துறை, பாலப்பட்டி, வச்சினாம்பாளையம், சிறுமுகை ஆலங்கொம்பு பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}