என்னது... வெயில் இன்னும் அதிகரிக்குமா?... வானிலை மையம் தந்த ஹாட் நியூஸ்

Apr 12, 2024,04:10 PM IST

சென்னை : அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலையில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால் அதற்கு பிறகு அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை படிப்படியாக உயரும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.


தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது. வெயிலின் கொடூர தாக்கம் எப்போது தான் குறையும், கொஞ்சம் மழை பெய்யாதா என ஏங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு குட் நியூசாக, அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கூறி இருந்தது. இதனால் மக்கள் சந்தோஷப்பட்டனர். வானிலை மையம் சொன்னது போலவே நேற்று பிற்பகல் முதல் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதுரை உள்ளிட்ட சில இடங்களில் மழையும் பெய்தது.




இந்நிலையில் சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலையில் எந்த மாற்றமும் ஏற்படாது. அதற்கு பிறகு 3 நாட்களுக்கு வெப்பம் படிப்படியாக அதிகரிக்கும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரளவிற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மன்னார் வளைகுடா, தென் தமிழகத்தின் கடலோர பகுதிகள், தெற்கு கேரளாவின் கடலோர பகுதிகளில் கடல் காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ., வேகத்தில் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்