சென்னை : அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலையில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால் அதற்கு பிறகு அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை படிப்படியாக உயரும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது. வெயிலின் கொடூர தாக்கம் எப்போது தான் குறையும், கொஞ்சம் மழை பெய்யாதா என ஏங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு குட் நியூசாக, அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கூறி இருந்தது. இதனால் மக்கள் சந்தோஷப்பட்டனர். வானிலை மையம் சொன்னது போலவே நேற்று பிற்பகல் முதல் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதுரை உள்ளிட்ட சில இடங்களில் மழையும் பெய்தது.
இந்நிலையில் சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலையில் எந்த மாற்றமும் ஏற்படாது. அதற்கு பிறகு 3 நாட்களுக்கு வெப்பம் படிப்படியாக அதிகரிக்கும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரளவிற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மன்னார் வளைகுடா, தென் தமிழகத்தின் கடலோர பகுதிகள், தெற்கு கேரளாவின் கடலோர பகுதிகளில் கடல் காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ., வேகத்தில் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Gold Rate strikes twice: தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை.. காலையில் ரூ. 520.. மாலையில் ரூ.960 உயர்வு
மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார்..யாரை எல்லாம் சந்திக்க திட்டம்?
தேசியவாதியான ஐயா குமரி ஆனந்தன் மறைவு தமிழகத்துக்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு: அண்ணாமலை
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பா..? வானிலை மையம் விளக்கம்!
நீட் எதிர்ப்பு என்பது... முதல்வர் ஆடும் சுயநல நாடகம்: பாஜக தலைவர் அண்ணாமலை!
நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்.. குமரி அனந்தன் குறித்து டாக்டர் தமிழிசை உருக்கம்!
இலக்கியச் செல்வர்.. காங்கிரஸ் மூத்த தலைவர்.. காமராஜரின் சிஷ்யர்.. மறைந்தார் குமரி அனந்தன்!
மதுரை குலுங்க.. வைகை ஆற்றில் கள்ளழகர்.. வந்திறங்க போறாரு.. வெளியானது தேதி!
உலகமே எதிர்பார்க்கும் அஜித்தின் குட் பேட் அக்லி நாளை வெளியீடு.. உற்சாகத்தில் ரசிகர்கள்!