ஹரியானா: உடல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் மல்யுத்த போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனையடுத்து ஹரியானாவை சேர்ந்த அவருக்கு வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கான வெகுமதி அளித்து மரியாதை வழங்கப்படும் என அம்மாநில அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.
ஹரியானா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். 29 வயதான வினேஷ் போகத், காமன்வெல்த் விளையாட்டில் ஹாட்ரிக் தங்கம் வென்று சாதனை படைத்தவர். சாதனை வீராங்கனையான வினேஷ் போகத், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்தவரான பாஜக எம்பி பிரிஜ் பூஷனுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை கூறிய வீராங்கனைகளுக்கு ஆதரவா களம் குதித்து போராடியவர், தெருவோரத்தில் படுத்துத் தூங்கி போராட்டம் நடத்தியவர்.
இந்த நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் அவர் பங்கேற்ற நிலையில் உடல் எடை அதிகரிப்பு காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனம் உடைந்த அவர் உடலில் நீர்ச்சத்து குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார். இந்த பின்னணியில் மல்யுத்தத்தை விட்டு விலகுவதாக அவர் ஓய்வு முடிவை வலியுடன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இந்திய ரசிகர்களிடயே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில் வினேஷ் போகத்துக்கு ஆதரவு அளித்துள்ள ஹரியானா அரசு அவரை உரிய முறையில் கெளரவிக்கப் போவதாக தெரிவித்துள்ளது. வினேஷ் போகத்திற்கு வெள்ளிப்பதக்கம் வென்றவருக்கான அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டு மரியாதை தரப்படும். ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் போலவே வினேஷ் போகத்துக்கு மரியாதை, வெகுமதி, அனைத்து சலுகைகளும் வழங்கப்படும் என ஹரியானா மாநில முதல்வர் நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார்.
நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்.. குமரி அனந்தன் குறித்து டாக்டர் தமிழிசை உருக்கம்!
இலக்கியச் செல்வர்.. காங்கிரஸ் மூத்த தலைவர்.. காமராஜரின் சிஷ்யர்.. மறைந்தார் குமரி அனந்தன்!
மதுரை குலுங்க.. வைகை ஆற்றில் கள்ளழகர்.. வந்திறங்க போறாரு.. வெளியானது தேதி!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 09, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்
தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்
Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!