மும்பை: மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக சமீபத்தில் நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா இன்னும் காயம் சரியாகததால், ஐபிஎல் 2024 தொடரில் விளையாடுவது சந்தேகம்தான் என்று தகவல்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளன.
ஹர்திக் பாண்ட்யாவிற்கு கணுக்காலில் ஏற்பட்ட காயம் இன்னும் சரியாகவில்லை. இதனால் அவர் விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.
சமீபத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட வீரர்தான் ஹர்திக் பாண்ட்யா. கடந்த 2 சீசனாக அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வந்தார். இந்த நிலையில், ஐபிஎல் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து அதிரடியாக மும்பை இந்தியன்ஸுக்கு வந்தார். ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் அவர் அறிவிக்கப்பட்டார். ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களுக்கு பொருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
ரசிகர்களின் ஏமாற்றம் கோபமாக மாறி, மும்பை இந்தியன்ஸ் அணியை சமூக வலைதளங்களில் அன் பாலோ செய்தனர். இந்த நிலையில்தான் ஹர்திக் பாண்ட்யாவுக்கு காயம் சரியாகவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. இதனால் இந்தத் தொடரில் அவர் விளையாடுவது சந்தேகமாம். அவர் விளையாட முடியாமல் போனால் ரோஹித் சர்மாவே கேப்டனாக தொடரக் கூடும் என்று தெரிகிறது.
சமீபத்தில் முடிவடைந்த உலகக் கோப்பை போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரானஆட்டத்தின் போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. அதிலிருந்து அவர் இன்னும் சரியாகவில்லை என்று கூறப்படுகிறது. ஐபிஎல் தொடருக்குள் அவர் சரியாகி விடுவார் என்று கருதப்பட்டது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்று கருதப்படுவதால் அவர் விளையாடுவது சந்தேகம்தான் என்று சொல்கிறார்கள்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}