சென்னை: இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணிக்கு இன்று பிறந்த நாள். சமீபத்தில் மறைந்த அவர் குறித்து அவரது சித்தப்பா மகனும், அண்ணனுமான, இயக்குநர் வெங்கட் பிரபு ஹாப்பி பர்த்டே .... ஐ மிஸ் யூ தங்கச்சி என உருக்கமாக டிவீட் போட்டுள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி கடந்த 25ம் தேதி காலமானார். அவருக்கு வயது 47. கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தவர், அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்தார். சிகிச்சை பலன் இன்றி காலமானார்.
குயில் போன்ற குரலுக்கு சொந்தக்காரர். ராசய்யா படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர். இவர் பாடிய மஸ்தானா மஸ்தானா பாடல் மிகப் பெரிய ஹிட்டாகியது. பலரது இசையில் பின்னணி பாடியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் பின்னணி பாடியுள்ளார்.
இளையராஜா இசையில் பாரதி படத்தில் இவர் பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலுக்கு தேசிய விருதும் பெற்றுள்ளார். ஒரு சில படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார். பவதாரிணியின் உடல் இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், பவதாரிணியின் பிறந்த நாளான இன்று இயக்குனர் வெங்கட் பிரபு உருக்கமான டுவிட் ஒன்றை போட்டுள்ளார். பவதாரிணியுடன் வெங்கட் பிரபு இருக்கும் படத்தை போட்டு, இனிய பிறந்த நாள் தங்கச்சி. நீ மகிழ்ச்சியான இடத்தில் இருப்பாய் என்று நம்புகிறோம்.. ஐ மிஸ் யூ சோ மச் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு நெட்டிசன்கள் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}