அடுத்த 24 மணி நேரத்தில்.. 10 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. குடையோட வெளில போங்க!

Oct 31, 2023,06:54 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. 


இலங்கை மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சியை மழையை ஒட்டிய பகுதிகளான கிருஷ்ணகிரி ,சேலம் , திருப்பத்தூர் ,மதுரை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் தேனி தர்மபுரி, விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.




தற்போது மூன்று நாட்களுக்கு தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.  எனவும்  நவம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.


வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரையில், இன்றுடன் அக்டோபர் மாதம் முடியும் நிலையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழையின் அளவு 98மி.மீ பதிவாகியுள்ளது. இந்தக் காலகட்டத்தில்  இயல்பு அளவு 121 மி. மீ ஆகும்.


தற்போது வடகிழக்கு பருவமழையானது இயல்பு அளவைவிட 43 சதவீதம் குறைவு. இது 123 ஆண்டுகளில் ஒன்பதாவது முறையாக அக்டோபர் மாதத்தில் குறைவாக பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான சிறப்பு எச்சரிக்கை எதுவும் இல்லை . சென்னையைப் பொறுத்தவரை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் .நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.


மேலும் இந்த வருடம் வடகிழக்கு பருவமழையானது நிலையாக இல்லை. காற்றில் ஈரப்பதம் ஈரப்பதமின்மையால் தற்போது காற்று கிழக்கிலிருந்து மேற்காக நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வு நடக்கும் போது இதுபோல மழை விட்டு விட்டு தான் செய்யக்கூடும். நவம்பர் மாதத்திற்கான அறிவிப்பை இன்று மாலை வெளியிடப்படும் என சென்னை வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்