டிரம்ப் மீது 2வது முறையாக துப்பாக்கிச் சூடு...அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு

Sep 16, 2024,09:30 AM IST

வாஷிங்டன் :   அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது இரண்டாவது முறையாக மீண்டும் துப்பாக்கிச் சூடு தாக்குதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவை மீண்டும் பரபரப்பாக்கி உள்ளது. 


அமெரிக்காவில் புதிய அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடக்க உள்ளது. இதற்கான பிரச்சாரங்கள் அமெரிக்காவில் காரசாரமாக சென்று கொண்டிருக்கிறது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் போட்டுகிறார்கள். அதிபர் தேர்தலில் இவர்கள் இருவரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கமலா ஹாரிஸ் பற்றி டிரம்ப் முன் வைக்கும் விமர்சனங்களும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.




இந்நிலையில் ஜூலை மாதம் பென்சில்வேனியாவில்  அதிபர் தேர்தலுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த டிரம்ப் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினார். இதில் அதிர்ஷ்டவசமாக டிரம்ப் உயிர் தப்பினார். துப்பாக்கி குண்டு அவரது வலது காதில் பட்டதால், அவருக்கு காயம் ஏற்பட்டது. இது பரபரப்பு சற்று அடங்கி, தற்போது தேர்தல் பிரசாரத்தில் குறித்து அனைவரும் தீவிரமாக கவனம் செலுத்த துவங்கினர். இந்நிலையில் டிரம்ப் மீது மீண்டும் தற்போது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


புளோரிடா மாகாணத்தில் உள்ள தனது வீட்டில் டிரம்ப், கோல்ப் மைதானத்தில் இருந்த போது அவரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்வதற்கு முயற்சி நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது டிரம்ப்பை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் கிடையாது என்றும், மைதானத்திற்கு அருகே இரண்டு இரண்டு நபர்கள் இடையே இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் உடனடியாக டிரம்ப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என சொல்லப்பட்டார்.


இரண்டாவது முறையாக டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி செய்யப்பட்டுள்ள விவகாரம் அமெரிக்க மக்களிடமும், அதிபர் தேர்தலிலும் பரபரப்பை கிளப்பி உள்ளது. தற்போது டிரம்ப் பாதுகாப்பாகவும், நலமுடனும் இருப்பதாக குடியரசுக் கட்சி சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்