போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி பகுதியில் உள்ள அரசு அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் ரெய்டு வந்தனர். அப்போது லஞ்சப் பணத்தை அதிகாரி ஒருவர் டக்கென வாயில் போட்டு மென்று முழுங்கி விட்டார்.
வாயில் வெத்தலை பாக்கு போடுவது போல அவர் ஆசுவாசமாக கடித்து மென்று பணத்தை விழுங்கியதால் அவரைப் பிடிக்க வந்த போலீஸார் கையைப் பிசைந்து கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் நின்றனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி விட்டது.
அந்த அதிகாரியின் பெயர் கஜேந்திர சிங். இவர் பெரிய அளவில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து அவரை கையும் களவுமாக பிடிக்க போலீஸார் திட்டமிட்டனர். அதன்படி தங்களிடம் புகார் கொடுத்த ஒருவரிடம் ரூ. 5000 பணத்தைக் கொடுத்து அதை கஜேந்திர சிங்கிடம் ஒப்படைக்க கூறினர். அவரும் கொண்டு போய் கொடுத்தார். அப்போது பின்னாடியே வந்த போலீஸார் கஜேந்திர சிங்கை மடக்கிப் பிடிக்க திட்டமிட்டனர்.
திடீரென போலீஸாரைப் பார்த்த கஜேந்திர சிங் அதிர்ச்சி அடைந்தார். ஆனால்அடுத்த விநாடியே சுதாரித்துக் கொண்ட அவர் அப்படியே அந்த ரூபாய் நோட்டுக்களை எடுத்து வாயில் திணித்தார். வேகம் வேகமாக மெல்ல ஆரம்பித்தார். மடக் மடக்கென அதை கடித்து மென்று அவர் விழுங்கிய வேகத்தைப் பார்த்து கூடியிருந்தோர் அதிர்ச்சியாகி விட்டனர். அவரைத் தடுக்க முயன்றும் முடியவில்லை. மொத்த பணத்தையும் வாயில் வைத்து மென்று விட்டார் கஜேந்திர சிங்.
வாய்க்குள் ரூபாய்த் தாள்களை அதக்கிக் கொண்டு அவர் நின்று நிதானமாக மென்றதைப் பார்த்து அந்த இடமே பரபரப்பாகி விட்டது. மொத்தப் பணத்தையும் மனிதர் மென்று விழுங்கி விட்டார். அவரது உயிருக்கு ஏதாவது ஆபத்தாகி விடப் போகிறதே என்பதால் அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், உயிருக்கு ஆபத்தெல்லாம் இல்லை. அவர் நன்றாகவே இருப்பதாக தெரிவித்தனர்.
தற்போது அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேல் விசாரணை நடந்து வருகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}