சென்னை: சென்னையின் முக்கிய பகுதிகளிலிருந்து கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கான பஸ் கட்டணத்தை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னை சாலைப் போக்குவரத்து சமீப நாட்களாக சில முக்கிய மாற்றங்களை சந்தித்து வருகிறது. இதுநாள் வரை முக்கியப் பேருந்து நிலையமாக இருந்து வந்த கோயம்பேடு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பேருந்து நிலையமானது, கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதால், கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டின் பயன்பாடு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
அதி நவீன வசதிகளுடன் கூடிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இன்று முதல் முழுமையான பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அத்தோடு வட சென்னை பகுதி மக்களின் வசதிக்காக மாதவரத்திலிருந்தும் தென் மாவட்டங்களுக்கு குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் சென்னையின் முக்கியப் பகுதிகளிலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த விவரம் வருமாறு:
மாதவரம் டூ கிளாம்பாக்கம் - ரூ. 40
ரெட்டேரி டூ கிளாம்பாக்கம் - ரூ. 35
அம்பத்தூர் டூ கிளாம்பாக்கம் - ரூ. 30
மதுரவாயல் டூ கிளாம்பாக்கம் - ரூ. 25
பெருங்களத்தூர் டூ கிளாம்பாக்கம் ரூ. 10
வழக்கமான பஸ் கட்டணத்துடன் கூடுதலாக இந்த கட்டணம் பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உங்களது ஊருக்கான பயணக் கட்டணம் கிளாம்பாக்கத்திலிருந்து ரூ. 150 என்றால், மாதவரத்திலிருந்து நீங்கள் பஸ் ஏறுவதாக இருந்தால் உங்களிடமிருந்து ரூ. 190 பயணக் கட்டணமாக வசூலிக்கப்படும்.
Thala is Back: மீண்டும் கேப்டனானார் தல தோனி.. ருத்துராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடரிலிருந்து விலகல்!
விடைபெறுகிறார் அண்ணாமலை.. வந்தாச்சு தமிழ்நாடு பாஜக தலைவர் தேர்தல்.. நாளை விருப்ப மனு!
பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு
பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்
தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா..?
மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு
சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி
பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
{{comments.comment}}