புதுக்கோட்டை: தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்து பேச வேண்டியதையெல்லாம் ஆளுநர் பதவியில் அமர்ந்து கொண்டு ஆர். என். ரவி பேசுவது அழகல்ல என்று திருச்சி காங்கிரஸ் எம்.பி.யும், மூத்த காங்கிரஸ் தலைவருமான திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் திருநாவுக்கரசர். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாடு ஆளுநர் ரவியின் பேச்சு பாஜக தலைவருக்கு பொருத்தமான முறையில் உள்ளது. ஒரு கட்சியன் தலைவராக இருந்து கொண்டு பேச வேண்டியதையெல்லாம் அவர் ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு பேசுகிறார். இது அழகல்ல. அவரை தமிழ்நாடு பாஜக தலைவராக மாற்றி விடலாம்.
தனித் தமிழ்நாடு என்ற கோரிக்கையை தற்போது உள்ள எந்தத் தலைவரும் சொன்னதில்லை, வலியுறுத்தியதும்இல்லை. முன்பு அண்ணா சொன்னார்.. அது திராவிட நாடு கோரிக்கை, பின்னர் கைவிட்டு விட்டார். தமிழ்நாடு தற்போது இந்தியாவில் ஒரு மாநிலம். எனவே தமிழ்நாடு என்பதை பிரிவினைவாதமாக ஆளுநர் பார்ப்பது அவசியற்றது, தேவையற்றது.
அதிமுகவின் நிலை கவலைக்குரியதாக உள்ளது. அதை ஏதோ செய்யப் பார்க்கிறது பாஜக. உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு அதிமுக குறித்த ஒரு தெளிவு கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம்.
ஈரோடு கிழக்கு தொகுதி கடந்த முறை காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டு வென்ற தொகுதி. எனவே மீண்டும் காங்கிரஸே போட்டியிடும். அதற்குரிய அனுமதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. நிச்சயம் மீண்டும் வெற்றி பெறுவோம் என்றார் திருநாவுக்கரசர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}