சட்டசபைக் கூட்டம்.. தொடங்கிய சிறிது நேரத்திலேயே வெளியேறினார்.. ஆளுநர் ரவி.. அதிமுக அமளி!

Jan 06, 2025,05:08 PM IST

சென்னை: 2025 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை 9:30 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கும் என அறிவித்திருந்த நிலையில் கூட்டம் தொடங்கியதுமே அதிமுகவினர் அமளியில் இறங்கினர். இந்த நிலையில் ஆளுநர் ஆர். என். ரவியும், ஆளுநர் உரையை வாசிக்காமலேயே வெளியேறிச் சென்றார்.


தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தமிழக ஆளுநர் உரையுடன் தான் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதற்காக சட்டசபைக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தலைமை செயலகத்தில் காவல்துறை மரியாதை வழங்கப்பட்டது அதன் பிறகு அவருக்குப் பொன்னாடை அளித்து வரவேற்ற சபாநாயகர் அப்பாவு  சட்டப்பேரவை வளாகத்திற்குள் அழைத்துச் சென்றார்.




அதன் பின்னர் கூட்டத் தொடர் தொடங்கியது. சட்டசபை மரபுப்படி, முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இதையடுத்து ஆளுநர் உரையை வாசிக்காமலேயே ஆளுநர் ஆர். என். வெளியேறினார். மறுபக்கம் அதிமுகவினர் பெரும் அமளியில் இறங்கினர்.

அண்ணா  பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக அதிமுகவினர் முழக்கமிட்டனர். பதாகைகளை ஏந்தியபடி அவர்கள் கோஷமிட்டதால் சபையில் பெரும் அமளியாக இருந்தது.


இதையடுத்து அவர்களை வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். அதன் பின்னர் அதிமுகவினர் வெளியேறினர். இதைத் தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.


இதன்பிறகு சட்டப்பேரவை கூட்டத்தொடரானது ஒத்திவைக்கப்படும். அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்று எத்தனை நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்பது தீர்மானிக்கப்படும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

news

மாற்றுத்திறனாளிகள் குறித்த சர்ச்சை பேச்சு...வருத்தம் தெரிவித்த அமைச்சர் துரைமுருகன்

news

காங்கிரஸ் கம்யூனிஸ்ட்டை கண்டித்து.. தீர்மானங்களை கொண்டு வாங்க பார்ப்போம்..எடப்பாடி பழனிச்சாமி சவால்

அதிகம் பார்க்கும் செய்திகள்