சென்னை: நவராத்திரி பண்டிகை, தீபாவளி, கல்யாண சீசன் நேரத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் வாடிக்கையாளர்கள் செம குஷியாகி உள்ளனர். தங்கம் விலையும் இன்றும் சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.
நேற்று குறைந்திருந்த தங்கம் விலை, இன்றும் குறைந்தே காணப்படுகிறது. தங்கம் விலை குறைவால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமையன்று அன்று சவரனுக்கு ரூ.360 என உயர்ந்திருந்த தங்கம் விலை, நேற்று சவரனுக்கு ரூ.208 குறைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து இன்றும் சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புரட்டாசி மாதம் முடிய உள்ள நிலையில் தங்கம் விலை குறைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், அடுத்து வரும் ஐப்பசி மாதத்தில் முகூர்த்த நாட்கள் அதிகம் வருவதால் இன்றே தங்க நகை வாங்குவோர் கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். ஏனெனில், ஐப்பசி பிறந்து விட்டால் தங்கம் விலை குறைவது சந்தேகமே, அத்துடன் தங்கத்தின் தேவையும் அதிகமாகும் என்பதால் மக்கள் தற்பொழுது நகை வாங்கி வருகின்றனர். தற்போது நவராத்திரி வேறு நடந்து வருகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தங்கம், வீடு வாங்குவதற்கும், முதலீடு செய்வதற்கும் உரிய சிறப்பான காலம் என்று வேறு சொல்லப்படுகிறது. இதனால் தங்கம் வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் இதுதான். 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5515 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 15 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 44120 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6016 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 17 ரூபாய் குறைவாகும்.
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.73.60 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 588.80 காசாக உள்ளது.
CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா
14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை
தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!
400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!
தமிழகத்தில்.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!
விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!
குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!
{{comments.comment}}