சென்னை: தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது. நேற்று சரிவில் இருந்த தங்கம் இன்று மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இன்று மட்டும் ஒரு சவரன் ரூ.360 உயர்ந்துள்ளது.
நகை விலை உயர்வால் பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்த விலை ஏற்றம் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. இதனால் நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் மிகுந்த கவலை அடைந்தனர். சீன மக்கள் பங்குச் சந்தையை நம்பாமல் தங்கத்தில் முதலீடு செய்து வருவதால் தான் தொடர்ந்து நகை விலை உயர்ந்து வருகிறது. இந்ந நிலை உலக நாடுகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. நேற்று குறைந்த தங்கம் இன்று மீண்டும் உயர்ந்தது. தங்கம் விலை உயர்ந்ததால் மீண்டும் நகை வாங்குபவர்களிடையே சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்றைய தங்கம் விலை...
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6755 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 45 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.360 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,040 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7369 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,952 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.392 உயர்ந்துள்ளது.
வெள்ளி விலை...
தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது. வெள்ளியின் விலை நேற்றைய விலையை விட இன்று 2 ரூபாய் உயர்ந்து 1 கிராம் வெள்ளி விலை 88 ரூபாயாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 704 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2000 உயர்ந்து ரூ.88.000 க்கு விற்கப்பட்டு வருகிறது.
CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா
14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை
தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!
400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!
தமிழகத்தில்.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!
விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!
குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!
{{comments.comment}}