வெயிலுக்கு ஈக்வலாக தகிக்கும் தங்கம்.. சாதாரண மக்களை கலக்கத்தில் ஆழ்த்தும் விலை உயர்வு!

Mar 25, 2024,12:39 PM IST

சென்னை:  தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கிறது. இன்று சவரனுக்கு  ரூ.180 உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தால் நகைப்பிரியர்கள் தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளனர். சாமானியர்களை இந்த நகை விலை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.


கடந்த சில மாதங்களாகவே நகை விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வால் நடுத்தர மற்றும் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறது தங்கம். எந்த  விஷேசம் என்றாலும் சிறிதளவாவது நகையின் பயன்பாடு இருந்து வருகிறது. இது சங்க காலம் முதல் இன்றைய நவீன காலம் வரை நடைமுறையில் இருந்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட நகை சமீபகாலத்தில் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. இது நடுத்தர மக்கள் மற்றும் சாமானி மக்களை பெரிதும் பாதிப்படைய செய்துள்ளது.




நகை விலை ஒரு நாள் ஏற்றம், ஒரு நாள் இறக்கம் என்று இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்த்தால் நகை விலை உயரத்தான் செய்து வருகிறது.  நகை விலை குறைவு என்பது ஒரு கண் துடைப்பு போலவே இருந்து வருகிறது. இந்த நகை விலை உயர்வால் சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வரும் காலத்தில் தாலிக்கு தங்கம் வாங்குவது என்பதும் குதிரை கொம்பாக மாறும் நிலைக்கு வந்துள்ளது.


இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை,  1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6205 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 20 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.180 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 49,640 ரூபாயாக உள்ளது.  1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6769 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.54152 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.180 உயர்ந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.196 உயர்ந்துள்ளது.


தங்கம் மட்டுமா உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலையும் உயர்ந்தே தான் உள்ளது. வெள்ளியின் விலை நேற்றைய விலையை விட இன்று  0.30 காசுகள் உயர்ந்து இன்று 1 கிராம் வெள்ளி விலை 80.80 காசுகளாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 646.40 ஆக உள்ளது. 


தங்கம் விலை ஏற்றம் கண்டு வருவதினால் முதலீட்டாளர்களும் தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்யத்தொடங்கியுள்ளனர். தங்கத்தின் தேவை அதிகரிப்பதன் காரணமாக, விலை ஏற்றம் கண்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச அரசியல் சூழல், நகையில் முதலீடு ஆகியவற்றின் காரணத்தாலும் தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளதாக  நிபுணர்கள் தெரிவித்து  வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்