சிவகங்கை: மகா சிவராத்திரியை முன்னிட்டு திருப்புவனம் கால்நடை சந்தையில் ஆடு கோழி விற்பனை களைகட்டி உள்ளது. மக்களின் தேவையும் அதிகரித்துள்ளதால் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கால்நடை சந்தை புகழ்பெற்றதாகும். இங்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் கால்நடை சந்தை நடைபெறுவது வழக்கம். சுற்று வட்டார பகுதிகளான மணல்மேடு, கீழடி, கொந்தகை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராமப்புற மக்கள் ஆடு கோழிகள் வளர்ப்பதை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இவர்கள் வளர்க்கும் வெள்ளாடு, செம்மறியாடு, கிடாய் மற்றும் கோழிகளை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் கால்நடை சந்தைகளில் விற்பனை செய்வதை வழக்கமாகக் கொண்டு வருகின்றனர்.
இங்கு வாரந்தோறும் நடைபெறும் கால்நடை சந்தைகளில் வெளியூர் மற்றும் உள்ளூர் மக்கள் வந்து ஆடு கோழிகளை வாங்கி செல்கின்றனர். குறிப்பாக பக்ரீத், தீபாவளி, ரம்ஜான், உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில் திருப்புவனம் கால்நடைச் சந்தை களைகட்டும். அப்போது அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரை கால்நடைகள் விற்பனைகள் ஜோராக நடைபெற்று வரும்.
அந்த வகையில் பிப்ரவரி 26 ஆம் தேதி புதன்கிழமை மகா சிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. இந்த சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான மக்கள் ஆடுகள் கோழிகளை வாங்க கேரளா, தேனி, மதுரை, விருதுநகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருப்புவனம் கால்நடை சந்தையில் குவிந்தனர். அதிகாலை 5 மணி முதலே அதிக மக்கள் வாங்க வந்ததால் ஆடு கோழி விற்பனை களைகட்டியது.
சாதாரணமாக 10 கிலோ எடை கொண்ட ஆடு கடந்த வாரம் 7000 முதல் 8000 வரை விற்பனை செய்யப்பட்டது.ஆனால் இன்று அதிக மக்கள் ஆடும் கோழிகளை வாங்க வந்ததால் 10 கிலோ எடை கொண்ட ஆட்டு விலை உயர்ந்து 12000 வரை விற்பனை செய்யப்பட்டது.20 கிலோ எடை கொண்ட கிடா ரூபாய் 23 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல் இரண்டு ஜோடி வான்கோழி ரூபாய் 1300க்கும், ஒரு கிலோ சேவல் ரூபாய் 400க்கும் விற்பனையானது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!
அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!
கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!
தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
பூஜ்ஜிய நிழல் தினம்... பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!
குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம்... 9 மாவட்டங்களுக்கு அனுமதி!
{{comments.comment}}