மகா சிவராத்திரியை முன்னிட்டு.. திருப்புவனம் கால்நடை சந்தையில்.. களைகட்டிய ஆட்டு விற்பனை!

Feb 18, 2025,11:07 AM IST

சிவகங்கை: மகா சிவராத்திரியை முன்னிட்டு திருப்புவனம் கால்நடை சந்தையில் ஆடு கோழி விற்பனை களைகட்டி உள்ளது. மக்களின் தேவையும் அதிகரித்துள்ளதால் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கால்நடை சந்தை புகழ்பெற்றதாகும். இங்கு  வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் கால்நடை சந்தை  நடைபெறுவது வழக்கம். சுற்று வட்டார பகுதிகளான மணல்மேடு, கீழடி, கொந்தகை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராமப்புற மக்கள் ஆடு கோழிகள் வளர்ப்பதை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இவர்கள் வளர்க்கும் வெள்ளாடு, செம்மறியாடு, கிடாய் மற்றும் கோழிகளை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் கால்நடை சந்தைகளில் விற்பனை செய்வதை வழக்கமாகக் கொண்டு வருகின்றனர். 


இங்கு வாரந்தோறும் நடைபெறும் கால்நடை சந்தைகளில் வெளியூர் மற்றும் உள்ளூர் மக்கள் வந்து ஆடு கோழிகளை வாங்கி செல்கின்றனர். குறிப்பாக பக்ரீத், தீபாவளி, ரம்ஜான், உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில் திருப்புவனம் கால்நடைச் சந்தை களைகட்டும். அப்போது அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரை கால்நடைகள் விற்பனைகள் ஜோராக நடைபெற்று வரும்.




அந்த வகையில் பிப்ரவரி 26 ஆம் தேதி புதன்கிழமை மகா சிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. இந்த சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான மக்கள் ஆடுகள் கோழிகளை வாங்க கேரளா, தேனி, மதுரை, விருதுநகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும்  திருப்புவனம் கால்நடை சந்தையில் குவிந்தனர். அதிகாலை 5 மணி முதலே அதிக மக்கள் வாங்க வந்ததால் ஆடு கோழி விற்பனை களைகட்டியது. 


சாதாரணமாக 10 கிலோ எடை கொண்ட ஆடு கடந்த வாரம் 7000 முதல் 8000 வரை விற்பனை செய்யப்பட்டது.ஆனால் இன்று அதிக மக்கள் ஆடும் கோழிகளை வாங்க வந்ததால் 10 கிலோ எடை கொண்ட ஆட்டு விலை உயர்ந்து 12000 வரை விற்பனை செய்யப்பட்டது.20 கிலோ எடை கொண்ட கிடா ரூபாய் 23 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.


அதேபோல் இரண்டு ஜோடி வான்கோழி ரூபாய் 1300க்கும், ஒரு கிலோ சேவல் ரூபாய் 400க்கும் விற்பனையானது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சீனாவில் மீண்டும் ஒரு கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு.. வவ்வாலிலிருந்து மனிதர்களுக்கு பரவுமாம்!

news

2000 கோடி அல்ல.. 10000 கோடியே கொடுத்தாலும் சரி.. கையெழுத்துப் போட மாட்டோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

பிரதமர் நரேந்திர மோடியின்.. முதன்மைச் செயலாளரானார்.. சக்திகாந்த தாஸ்.. ஓய்வுக்குப் பின் புதுப் பதவி!

news

தான் யார்.. எதற்காக வந்தோம் என்பதே கமல்ஹாசனுக்குப் புரியலையே.. தவெகவின் அதிரடி தாக்கு!

news

பிப்., 26ல் தவெகவின் ஆண்டு விழா.. 2000 பேருக்கு மட்டும் தான் அனுமதி..!

news

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா vs பாகிஸ்தான்.. நாளைக்கு ஜெயிக்காம விட்ரக் கூடாதுடா பரமா!

news

அனல் பறக்கும் பேச்சாளர்.. அதிரடி டிபேட்டர்.. நாம் தமிழர் கட்சியின் அடையாளம்.. யார் இந்த காளியம்மாள்?

news

தங்கச்சி காளியம்மாள் விலகுவதாக இருந்தால் விலகிக்கலாம்.. ரொம்ப நன்றி என்று சொல்வோம்.. சீமான்

news

சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள்.. நாம் தமிழர் கட்சிக்கு முழுக்கா?.. பரபரக்கும் இன்விடேஷன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்