சென்னை: கடந்த 5 வருடமாக கண்ணாடி உடையும் சம்பவங்கள் இல்லாமல் அமைதியாகப் போய்க் கொண்டிருந்த நிலையில், நேற்று புதிய விமான முனையத்தின் நுழைவு வாசல் பகுதியில் இருந்த கண்ணாடிக் கதவு நொறுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை விமான நிலையம் என்றாலே,, கண்ணாடியெல்லாம் உடைஞ்சு உடைஞ்சு விழுமே அதானே என்று கிண்டல், கேலி செய்யும்ள அளவுக்கு ஒரு காலத்தில் மோசமான நிலை இருந்தது. கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட முறை கண்ணாடிகள் உடைந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் நடந்துள்ளது. தினசரி ஏதாவது ஒரு கண்ணாடி உடையும். அப்படி இருந்தது நிலைமை. கடந்த ஐந்து வருடமாகத்தான் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் புதிய முனையம் அதி நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டது. அதை பிரதமர் நரேந்திர மோடி திறந்தும் வைத்தார். இதனால் விமான நிலையம் சர்வதேச அளவில் புதுப்பொலிவுடன் இயங்கி வருகின்றது.
இந்த முனையத்தின் 14வது நுழைவு வாயில் பகுதியில் பணியாளர்கள் அதிகாரிகள் செல்லும் நுழைவு வாயில் உள்ளது. இங்கு நேற்று 7அடி உயர கண்ணாடி கதவின் ஒரு பகுதி விழுந்து நொறுங்கியது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடைந்த கண்ணாடி அப்படியே இருந்தது, சிதறல்கள் கீழே விழவில்லை. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
பயங்கர சத்தத்துடன் கண்ணாடி நொறுங்கியதால் ஊழியர்கள், பணியாளர்கள் ,உணவு வழங்குவோர் சத்தம் கேட்டு ஓடி வந்தனர். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் கண்ணாடி விழுந்து உடைந்தது பற்றி விசாரணை நடத்தினர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்த சம்பவம் நடந்திருப்பதால் மக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}