குப்பைத்தொட்டியில் விசப்பட்ட பெண் குழந்தை.. என்ன கொடுமை.. தயவு செஞ்சு இப்படி பண்ணாதீங்க!

Feb 17, 2024,05:20 PM IST
சென்னை: சென்னை பூந்தமல்லி அருகே குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை அருகில் இருந்த தம்பதியினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லி ராமானுஜம் கூடல் தெருவில் 33 வயதுடைய யுவராணி என்பவர் வசித்து வருகிறார். அவர் வீட்டின் அருகே ஒரு குப்பைத் தொட்டியில் இருந்து பூனை கத்துவது போல சத்தம் கேட்டுள்ளது. யுவராணி ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளார். அப்போது அந்தக் குப்பைத் தொட்டியில், பிறந்து ஒரு சில மணி நேரமேயான பச்சிளம் பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் கிடந்துள்ளது. எறும்புகள் மொய்த்த நிலையில் வலி தாங்காமல் குழந்தை கதறி அழுது சோர்ந்து  போயிருந்தது. 

இதை பார்த்த யுவராணி கணவரை அழைத்து அந்த குழந்தையை குப்பை தொட்டியில் இருந்து மீட்டு பூந்தமல்லி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று முதல் உதவி அளித்துள்ளார். அதன் பின்னர் பூந்தமல்லி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டு இருந்ததனால், பூந்தமல்லி மருத்துவமனையில் இருந்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 



பூந்தமல்லி போலீசார் குழந்தையை மீட்கப்பட்ட இடத்திற்குச் சென்று குழந்தை வீசியது யார்? எதற்காக  இப்படி செய்தார்கள் என்று ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அருகில் இருக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகளும் மூலமாகவும் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இது குறித்து யுவராணி பேசுகையில், குழந்தையை இப்படி குப்பை தொட்டியில் வீசி இருப்பது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. இந்த மாதிரி எல்லாம் யாரும் செய்யாதீர்கள். ஆசிரமத்தில் கூட போய் சேர்த்திடுங்கள். பூந்தமல்லியை அடுத்து, இப்ப எக்மோர் ஹாஸ்பிட்டல சேர்த்திருக்கோம். இப்ப பாப்பா நல்லா இருக்கு. இன்னும் 15 நாள் இன்குபேட்டரில் வைக்கனும்னு சொல்லியிருக்காங்க. 2 நாள்  குப்பையில் இருந்து உயிருக்கு போராடிட்டு இருந்த குழந்தை உயிர் பிழைத்ததினால், பாப்பாவுக்கு  அதிர்ஷ்டலட்சுமி என்று பெயர் சூட்டியுள்ளோம் என்றார் யுவராணி.

சமீபத்திய செய்திகள்

news

தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்

news

தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்

news

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்

news

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்

news

Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!

news

ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது‌.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

news

Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!

news

ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்

news

ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவமவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்