வாஷிங்டன்: பூமியை நோக்கி அபோபிஸ் என்ற விண்கல் வேகமாக நகர்ந்து வருகிறது. இது பூமியை தாக்கவும் வாய்ப்புண்டு என நாசா தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் விண்கற்களால் ஆபத்து அதிகம் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பல விண்கற்கள் இருந்தாலும், ஒரு சில விண்கற்களால் மட்டுமே பூமிக்கு ஆபத்து அதிகம். இந்த நிலையில் அபோபிஸ் எனும் விண்கல் 2029ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி பூமிக்கு மிக அருகில் வரலாம் என எதிர்பார்க்கப்படுவதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
இந்த விண்கல் கடந்த 2004ம் ஆண்டு தான் கண்டுபிடிக்கப்பட்டது. அபோபிஸ் விண்கல் 2029ம் ஆண்டில் பூமிக்கு மிக அருகில் வர உள்ளதால் இது பூமியை தாக்கும் என்றும் ஒரு சில நேரங்களில் தாக்காமலும் செல்ல வாய்ப்பு உள்ளதாக நாசா கணித்துள்ளது. இது பூமியை தாக்கினால் 3 கிலோ மீட்டர் ஆழத்தில், 10 கிலோ மீட்டர் அகலத்தில் ஒரு பெரிய பள்ளம் ஏற்படும்.
இந்த கல் விழுந்த இடத்தில் 10 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உருவாகும். இந்த கல் விழும் 320 கிலோமீட்டர் பரப்பளவிற்கு எந்த கட்டிடமும் இருக்க வாய்ப்பில்லையாம். எல்லாம் காலியாகி விடுமாம். விண்கல் விழுந்த இடத்தில் லட்சக்கணக்கில் மக்கள் இறப்பார்கள் என்றும், கோடிக்கணக்கான மக்கள் படுகாயம் அடைவார்கள் என்றும் நாசா தெரிவித்துள்ளது.
இதனால் பல நாடுகளில் பொருளாதார நிலை கடுமையாக பாதிக்ககூடும், இது உலக அளவில் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அந்த விண்கல் பூமியை தாக்குவதற்கான வாய்ப்பு குறைவு என்ற நம்பிக்கையையும் நாசா வெளியிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}