கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!

Apr 01, 2025,06:24 PM IST

சென்னை: கும்பகோணம் வெற்றிலைக்கும், கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.


ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகக் கூடிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இந்த குறியீடு பெறப்படுவதன் மூலம் அந்த பொருட்களுக்கு சட்டப் பாதுகாப்பு கிடைக்கிறது. இது அந்த பகுதியில் உள்ள அனைவருக்குமான உரிமையாக பார்க்கப்படுகிறது. பாரம்பரிய முறைகளின் படி இந்த பொருட்களானது தயாரிக்கப் படுகிறது என்பதற்கான சான்றிதழாக இந்த புவிசார் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் தோற்றம் கொண்ட தயாரிப்புகளில் வைக்கப்படும் ஒரு முத்திரை ஆகும்.


இந்த குறியீட்டினை எளிதில் பெற்றுவிட முடியாது. அந்த பொருட்களின் தனித்தன்மை, தயாரிக்கும் முறை, விளைவிக்கப்படும் செயல் முறை உள்ளிட்ட பல்வேறு விதமாக தகவல்கள் சேகரித்து மத்திய அரசிடம் விண்ணப்பிக்க வேண்டும். மத்திய அரசும் அதனை ஆராய்ந்து அதற்கான தனித்தன்மையை கண்டுபிடித்த பின்னர் தான் அதற்கான குறியீட்டை வழங்கி வருகின்றது. இந்தியாவைப் பொறுத்தவரை, அதன் புவிசார் குறியீட்டின் அடையாள முத்திரையுடன் கூடிய தயாரிப்புகளானது நம்ப முடியாத வகையில் இந்தியாவின் விலை மதிப்பற்ற அரும்பொருட் களஞ்சியமாகக் கருதப்படுகின்றன. 




பொதுவாக விவசாயப் பொருட்கள், உணவுப் பொருட்கள், மது மற்றும் மது பானங்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் தொழில்துறைத் தயாரிப்புகளுக்கு புவிசார் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. அங்கீகரிக்கப்பட்ட பயனர்களாகப் பதிவு செய்தவர்களைத் தவிர வேறு யாரும் இதன் பிரபலமான தயாரிப்புப் பெயரைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை என்பதை குறியீடானது உறுதி செய்கிறது.


பல்வேறு சிறப்புகளுடன் கிடைக்கும் இந்த குறியீடு கும்பகோணம் வெற்றிலைக்கும், கன்னியாகுமரி தோவாளை மாணிக்க மாலைக்கும்  கிடைத்துள்ளது. இரு பொருட்களுக்கும் புவிசார் குறியீடு பெறப்பட்டிருப்பதாக வழக்கறிஞர் சஞ்சய் காந்தி அறிவித்துள்ளார். முதன் முறையாக விவசாய பொருளான கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாட்டை பொருத்தவரை இதுவரைக்கும் 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. மேலும், வந்தவாசி கோரைப்பாய், ஜவ்வாது புளி, கொல்லிமலை மிளகுக்கு புவிசார் குறியீடு பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்