டெல்லி: காஸாவில் உள்ள அல் அஹிலி அரபு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி மக்கள் 500 பேர் உயிர் இழந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கலும், அதிர்ச்சியும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினரிடையே கடந்த 12 நாட்களாக போர் நடந்து வருகிறது. இப்போரில் இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் கடுமையாக தாக்கி வருகின்றனர். இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் மடிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் காஸாவில் உள்ள அல் அஹிலி அரபு மருத்துமனை மீது ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியதில் 500க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு தாங்கள் காரணம் இல்லை என்றும் ஹமாஸ் ஏவிய ராக்கெட்தான் தவறுதலாக அஹில் அராப் மருத்துவமனை மீது விழுந்து விட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இதை காஸா சுகதாரத் துறை இதை மறுத்து, இஸ்ரேல் ராணுவம்தான் இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "காஸாவில் உள்ள அல் அஹிலி அரபு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பல உயிர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. பலியானவர்களின் குடும்பங்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகள் இருக்கும்.
தற்போது நடந்து வரும் போரில் அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருவது கவலை அளிப்பதாக உள்ளது. இது சீரியஸானது. தொடர்ந்து கவலை தருகிறது. இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு
பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்
தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா..?
மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு
சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி
பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}