டெல்லி : டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போதே துவங்கப்பட்டு வருகிறது. ஜி20 மாநாட்டை ஒட்டி டில்லியில் உள்ள அலுவலகங்கள், பள்ளிகள், வங்கிகள், கடைகள் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜி20 மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் இதற்காக டெல்லி வர உள்ளனர். இதனால் பாதுகாப்பு கருதி டெல்லியில் உள்ள அனைத்து அரசு, தனியார், முனிசிபல் கார்பரேஷன் அலுவலகங்கள், பள்ளிகள், வங்கிகள், நிதித்துறை நிறுவனங்கள், கடைகள் ஆகியன செப்டம்பர் 8 ம் தேதி முதல் 10 ம் தேதி வரை மூன்று நாட்கள் மூடப்பட உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
செப்டம்பர் 8 முதல் 10 ம் தேதி வரை பொது விடுமுறை விட வேண்டும் என டெல்லி போலீஸ் சிறப்பு கமிஷனர், டெல்லி மாநில அரசின் தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜி20 மாநாடு நடக்கும் நாட்களில் டெல்லியில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
டெல்லியில் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன பிரதமர் ஷி ஜின்பிங், கனடா பிரதமர் ஜஸ்டின், பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மாக்ரோன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}