டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது இரண்டாம் கட்ட பாத யாத்திரையை ஜனவரி 14ஆம் தேதி தொடங்கி மார்ச் 20இல் நிறைவு செய்கிறார். இந்த யாத்திரைக்கு "பாரத் நியாய யாத்திரை" என பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரையை நடத்தினார் ராகுல் காந்தி. இது நாடு முழுவதும் மிகப் பெரிய பேசு பொருளாக மாறியது. இந்த யாத்திரையானது 2023ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி முடிவடைந்தது. காங்கிரஸ் கட்சிக்கு பல மாநிலங்களில் செல்வாக்கை வலுப்படுத்த உதவியது.
பாரத் நியாய யாத்திரை
இந்நிலையில் ராகுல் காந்தி 2வது கட்டமாக இன்னொரு யாத்திரையை அடுத்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி தொடங்கவுள்ளார். இதற்கு பாரத் நியாய யாத்திரை என்று பெயரிடப்பட்டுள்ளது. இது மணிப்பூரில் தொடங்கி மும்பையில் முடியும். இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே. சி வேணுகோபால் கூறியதாவது:
இரண்டாம் கட்ட யாத்திரை மணிபூரிலிருந்து தொடங்கி நாகலாந்து, அசாம், மேகாலயா, மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் வழியாக மகாராஷ்டிராவின் மும்பை வரை மேற்கொள்ளப்படும்.
14 மாநிலங்கள் 85 மாவட்டங்கள் 66 நாட்கள்
மொத்தம் 14 மாநிலங்களில், 85 மாவட்டங்கள் வழியாக மக்களை சந்திக்கிறார் ராகுல் காந்தி. இந்தப் பயணம் மொத்தம் 66 நாட்கள் வரை நடைபெறும். இதன் பயண தூரம் 6500 கிலோமீட்டர் ஆகும் என்றார் வேணுகோபால்.
இனக் கலவரம் வெடித்து பல உயிர்களைக் குடித்த, பல பெண்களை மானபங்கப்படுத்தி நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளைப் பரப்பிய மணிப்பூரிலிருந்து ராகுல் காந்தியின் 2வது யாத்திரை தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
CSK vs KKR.. பர்ஸ்ட் பேட்டிங் மாமே.. கேப்டன் தோனி மாஜிக்குக்காக ரசிகர்கள் வெயிட்டிங்!
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா
14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை
தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!
400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!
தமிழகத்தில்.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!
விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!
குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!
{{comments.comment}}