மணிப்பூரில் மீண்டும் வன்முறை, துப்பாக்கிச்சூடு... 2 பேர் பலி

Aug 30, 2023,11:54 AM IST
இம்பால் : மணிப்பூரின் பிஷ்னுபூர் மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. அங்கு நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர். 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கொயிரடக் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஜங்மின்லுன் கங்தே என்ற 30 வயது தன்னார்வலர் உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டுள்ளனர். 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதே போல் நரன்செயினா என்ற கிராமத்தில் வயலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சலர் ஜோடின் என்பவர் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். 

நெஞ்சில் குண்டு காயங்களுடன் இருந்த அவர் தற்போது இம்பாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 

மாவட்ட போலீசார், அசாம் ஊர்காவல் படை, ராணுவம், மத்திய பாதுகாப்பு படையினர் தலையிட்ட பிறகு அங்கு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த துப்பாக்கிச் சூடு எதற்காக நடத்தப்பட்டது என தெரியவில்லை. ஜாதி பிரச்சனை காரணமாக இரு வேறு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. 

மணிப்பூரில் இந்த ஆண்டு மே மாதம் முதல் நடைபெற்று வரும் கலவரத்தில் இதுவரை 140 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!

news

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

அதிகம் பார்க்கும் செய்திகள்