Free Parking: சென்னையில் முக்கிய இடங்களில் பார்க்கிங் முற்றிலும் ஃப்ரீ.. தற்காலிகமாக!

Jun 08, 2024,01:43 PM IST

சென்னை: புதிய டெண்டர் விடும் வரை சென்னையில் முக்கிய இடங்களில் வாகன நிறுத்தம் இலவசம் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


சென்னை மாநகராட்சி வருவாயை அதிகரிக்கும் பொருட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, பாண்டி பஜார் உள்ளிட்ட 170க்கும் மேற்பட்ட  இடங்களில் தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக,  2 சக்கர வாகனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு 5 ரூபாயும், 4 சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 20 ரூபாயும் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 




இந்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் போதும், வாகன நிறுத்த செயல்பாடுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், ஸ்மார்ட் சிட்டி திட்ட வாகன நிறுத்தப்பகுதியில் 25 மீட்டர் இடைவேளையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு படி தனியார் நிறுவனங்கள் செயல்படவில்லை என்றும் புகார்கள் எழுந்தன. மேலும், கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனங்கள் சென்னை மெரினா கடற்கரை பகுதிகளில் முறையான அறிவிப்புபடி வாகன கட்டம் வசூலிக்கவில்லை என்றும், ஒரு வாகனத்திற்கு 300 ரூபாய் வசூலித்தாகவும், சமீபத்தில் பெரும் பிரச்சினை வெடித்தது. இந்த பிரச்சனை காவல் துறை வழக்கு வரை சென்றது.


இதன் காரணமாக தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டண வசூல் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.. அனுமதி ரத்து செய்யப்பட்டது தொடர்பாக சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட், மாநகராட்சி அனுமதி ரத்து செய்து உத்தரவிட்டது செல்லும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து புதிய டெண்டர் விட்டு, அனுமதி வழங்கப்படும் வரை சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, பாண்டி பஜார் உள்ளிட்ட இடங்களில் வாகனங்களை இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இங்கு எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீறி வசூல் செய்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்