Dr Manmohan Singh.. மன்மோகன் சிங்குக்கு ஆயிரக்கணக்கோனார் இறுதி அஞ்சலி.. டெல்லியில் உடல் தகனம்

Dec 28, 2024,06:49 PM IST

டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் நிகாம்போத் காட் பகுதியில் நடந்த இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு தகனம் செய்யப்பட்டது. 


முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் நேற்று முன்தினம் வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார். அவரது உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக நேற்று வைக்கப்பட்டிருந்தது.  அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.




மன்மோகன் சிங்கிற்கு மரியாதை செலுத்தும் நோக்கில் மத்திய அரசு சார்பில் ஏழு நாள் தூக்கம் அனுசரி படுகிறது. அதேபோல் காங்கிரஸ் சார்பிலும் ஏழு நாட்கள் அனைத்து கட்சி நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. 


இன்று மன்மோகன் சிங் உடல் காலை அவரது வீட்டில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு கொண்டு  செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து  காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக மன்மோகன் சிங் உடல் உடல் தகனம் நடைபெறவுள்ள நிகாம்போத் காட் பகுதிக்கு அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. மன்மோகன் சிங்கின் குடும்பத்தினருடன் ராகுல் காந்தியும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றார்.


யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ள நிகம்போத் காட் பகுதியில்  ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு மன்மோகன் சிங்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.


இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்ற பொருளாதார பிதாமகருக்கு நாடு கண்ணீர் மல்க விடை கொடுத்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்