சென்னை: மது விற்பனை படிப்படியாக குறைக்கப்படும் என்று சொல்லிக் கொண்டு மதுவை ஊக்குவிக்கின்ற அரசாக திமுக அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. மதுவிலக்கு துறையை மது ஊக்குவிப்பு துறையாக திமுக அரசு மாற்றி விட்டது. இது தவிர, போதைப் பொருள்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு திறமையற்ற அரசாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
மனிதனை விலங்கினின்று வேறுபடுத்தி காட்டுவது ஒழுக்கமே என்று சொன்னால் அது மிகையாகாது. 'ஒழுக்கம் விழுப்பம் தரும்', 'ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை' போன்ற சான்றோர் வாக்குகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. உலகப் பொதுமறையாம் திருக்குறளில் ஒழுக்கமுடைமை, அறன் வலியுறுத்தல், சான்றாண்மை போன்ற அதிகாரங்களில் ஒழுக்கத்தை வலியுறுத்தி இருக்கிறார் திருவள்ளுவர். ஆனால், ஒழுக்கம் என்றால் என்ன விலை? என்று கேட்கக்கூடிய அவல நிலை தமிழ்நாட்டில் தற்போது நிலவுகிறது.
நேற்று முன்தினம் கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஏழு கல்லூரி மாணவர்களால் கூட்டு பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், நேற்று திருப்பூர் மாவட்டத்தில் சொந்த மாநிலமான ஒடிசாவிற்கு செல்வதற்காக கணவன் மற்றும் குழந்தையுடன் பேருந்து நிலையத்தை காத்திருந்தவர்களை, பனியன் கம்பெனியில் வேலை வாங்கி தருவதாக நம்பிக்கை வார்த்தைக்கூறி அவர்களது வீட்டிற்கு அழைத்துச் சென்று கத்தி முனையில் அந்த பெண்ணை மிரட்டி அவர் கணவர் மற்றும் குழந்தை கண் முன்னே மூன்று வட மாநில வாலிபர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மேற்படி சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டாலும், பாலியல் வன்கொடுமை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆசிரியர்களே மாணவியரை பலாத்காரம் செய்யும் கொடுமைகள் தமிழ்நாட்டில் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகளுக்குக் காரணமாக விளங்குவது ஒழுக்கமின்மை.
இந்த ஒழுக்கமின்மை முக்கிய காரணம் அமோக மது விற்பனையும், அளவுக்கு அதிகமான போதைப் பொருட்கள் நடமாட்டம் தான். மது விற்பனை படிப்படியாக குறைக்கப்படும் என்று சொல்லிக் கொண்டு மதுவை ஊக்குவிக்கின்ற அரசாக திமுக அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. மதுவிலக்கு துறையை மது ஊக்குவிப்பு துறையாக திமுக அரசு மாற்றி விட்டது. இது தவிர, போதைப் பொருள்களில் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு திறமையற்ற அரசாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறது.
திமுக அரசின் நிர்வாக திறமையின்மை காரணமாக, தமிழ்நாட்டு மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. மாணவ, மாணவியரின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. யார் எப்போது தாக்கப்படுவார்கள் என்று தெரியாத அலங்கோல நிலை தமிழ்நாட்டின் நிலவுகிறது. மக்களுக்கான பாதுகாப்பினை, குறிப்பாக பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய எவ்விதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் திமுக அரசு எடுக்கவில்லை. பெண் காவலர்களை பாலியல் பராத்காரத்திற்கு உள்ளாக்கும் கொடூரம் தமிழ்நாட்டில் இருக்கிறது.
சட்டம் ஒழுங்கை தன் வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் அவர்கள், இனியாவது பாராட்டு மலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு கள யதார்த்தம் என்ன என்பதை கேட்டு தெரிந்து கொண்டு, தமிழ்நாட்டில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை வேரோடு அழிக்கவும், மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும், பாலியல் வன்கொடுமையாளர்கள் மீது பாரபட்சமின்றி உறுதியான நடவடிக்கை எடுக்கவும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
திரைத் துறையினர் வைத்த கோரிக்கை.. நிறைவேற்றிய.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
How to impress your wife?.. மனைவியை மகிழ்விக்க என்ன செய்யலாம்.. கணவர்களே இங்க வாங்க!
"கெட்அவுட் வார்த்தைக்கு உகந்தவர் பிரதமர் மோடி மட்டுமே!" - அமைச்சர் பி.கே.சேகர்பாபு..!
புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடும் அமல்படுத்த வேண்டும்.. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
மட்டன் சுக்கா.. மதுரை ஸ்டைலில் ச்சும்மா சுர்ருன்னு ஏறும் டேஸ்ட்டுடன்.. வாங்க சமைக்கலாம்!
கை கொடுக்கும் இயற்கை மருத்துவம்.. அதன் மகத்துவம் மற்றும் சாராம்சங்கள்!
தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்.. 3 நாட்கள் நடக்கப் போகும் சூரியக் கதிர் விழும் அற்புத நிகழ்வு!
வெறும் வெந்தயத்தை விடுங்க.. முளைகட்டியவெந்தயம் சாப்பிட்டுப் பார்த்திருக்கீங்களா?
சென்னை கோயம்பேடு சந்தை..இன்றைய காய்கறிகளின் விலை எவ்வளவு தெரியுமா..?
{{comments.comment}}