தேனி அருகே காட்டுக்குள் நுழைந்த முதியவர் சுட்டுக் கொலை.. வனத்துறை செயலால் அதிர்ச்சி!

Oct 29, 2023,09:57 PM IST

கம்பம்: தேனி மாவட்டம் வண்ணாத்திப்பாறைப் பகுதி வழியாக காட்டுக்குள் நுழைந்த முதியவர் ஈஸ்வரன் என்பவர் வனத்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பும் நிலவுகிறது.


வனத்துறை துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  வயலில் காவல் காப்பதற்காக போனவர் ஈஸ்வரன் என்று உறவினர்கள் கூறியுள்ளனர். ஆனால் வனத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், வனத்துறையினர் தடுத்து நிறுத்தியபோது அரிவாளால் தாக்க வந்ததாகவும், இதனால்தான் சுடப்பட்டதாகவும், வனத்துறை தரப்பில் கூறப்படுகிறது. 




தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர்தான் ஈஸ்வரன். வண்ணாத்திப்பாறைப் பகுதியில் இவர் காட்டுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. அவரை தடுத்து நிறுத்த முயன்றபோது ஏற்பட்ட மோதலில்தான் வனத்துறையினர் சுட்டதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் உண்மையில் என்ன நடந்தது என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.


கொல்லப்பட்ட ஈஸ்வரனின் உடல் கம்பம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு பிரேதப் பரிசோதனை நடந்து வருகிறது. 


ஒரு முதியவர் எப்படி வனத்துறையினரை எதிர்க்க முடியும்.. அதுவும் துப்பாக்கிகளுடன் வனத்துறையினர் இருக்கும்போது எதிர்க்கும் தைரியம் எப்படி வரும்.. சாதாரணமான முறையில் ஈஸ்வரனை தடுத்து அனுப்பியிருக்கலாமே.. அதை விடுத்து சுடும் அளவுக்கு நிலைமை போனது ஏன் என்று தெரியவில்லை. இந்த சம்பவத்தால் பதட்டம் நிலவுவதால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்