வாஷிங்டன்: மோயட் ஹென்னஸ்ஸி லூயிஸ் வுட்டன் நிறுவன தலைமை செயலதிகாரியும் தலைவருமான பெர்னார்ட் அர்னால்ட்.. இவர் தாங்க இப்போது உலகின் நம்பர் 1 பணக்காரர். அப்படீன்னா.. நம்ம டிவிட்டர் தம்பி எலான் மஸ்க் என்ன ஆனார்.. அவர் 2வது இடத்துக்குப் போய் விட்டார்!.
உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் லேட்டஸ்டாக முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் அர்னால்ட். இதுவரை இருந்து வந்த எலான் மஸ்க் 2வது இடத்துக்குப் போய் விட்டார்.
அர்னால்டின் சொத்து மதிப்பு 23.6 பில்லியன் டாலர் அதிகரித்து 207.6 பில்லியனாக உள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் பெர்னார்ட் அர்னால்ட். டெஸ்லா தலைமை செயலதிகாரி எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 204.7 பில்லியன் டாலராக உள்ளது. 18 மில்லியன் டாலருக்கும் மேல் அவரது வருவாய் குறைந்துள்ளதாக போர்ப்ஸ் கூறியுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு முதலே அர்னால்டுக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையே முதலிடத்திற்குப் போட்டி இருந்து வருகிறது.
லூயிஸ் வுட்டன் நிறுவனத்தின் தியோர், பல்கேரி , செபோரா ஆகிய பிராண்டுகளின் மதிப்பு கூடியுள்ளதால், லூயிஸ் வுட்டன் நிறுவனத்தின் வருவாயும் அதிகரித்துள்ளது. இதனால்தான் அர்னால்ட் முதலிடத்தைப் பிடிக்க முடிந்தது..
போர்ப்ஸ் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் உலகின் டாப் 10 பெரும் பணக்காரர்கள் பட்டியல்
பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் குடும்பம் - 207.6 பில்லியன் டாலர்
எலான் மஸ்க் - 204.7 பில்லியன் டாலர்
ஜெப் பெசாஸ் - 181.3 பில்லியன் டாலர்
லாரி எலிசன் - 142.2 பில்லியன் டாலர்
மார்க் ஜுக்கர்பர்க் - 139.1 பில்லியன் டாலர்
வாரன் பபட் - 127.2 பில்லியன் டாலர்
லாரி பேஜ் - 127.1 பில்லியன் டாலர்
பில் கேட்ஸ் - 122.9 பில்லியன் டாலர்
செர்ஜி பிரின் - 121.7 பில்லியன் டாலர்
ஸ்டீவ் பால்மர் - 118.8 பில்லியன் டாலர்
போர்ப்ஸ் லிஸ்ட்டில்தான் பெர்னார்ட் முதலிடத்தில் இருக்கிறார். ஆனால் ப்ளூம்பெர்க் பட்டியலில் அவருக்கு 3வது இடமே கிடைத்துள்ளது. முதலிடம் எலான் மஸ்க்குக்கும், 2வது இடத்தில் ஜெப் பெசாஸஸும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்
காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!
ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!
அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!
Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!
"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!
மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!
{{comments.comment}}