பிரதமர் மோடியைப் பின்பற்றும் அண்ணாமலை.. கோவில் கோவிலாக சென்று.. சாமி கும்பிடுகிறார்!

Jun 01, 2024,12:41 PM IST

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியைப் போலவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், தமிழகத்தில் உள்ள கோவில்களுகக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.


லோக்சபா தேர்தல் இன்றோடு முடிவடைகிறது. வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகின்றன. தேர்தல் குறித்த முடிவுகளும் அன்றே அறிவிக்கப்பட உள்ளது.




ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 தொகுதிகளும், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொத்தம் 13 தொகுதிகள் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 13 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், சத்தீஸ்கரில் ஒரு  தொகுதி, ஒடிசா ஒடிசாவில் 6 தொகுதிகள், இமாச்சல பிரதேசத்தில் நான்கு தொகுதிகள் என மொத்தம் 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், பிரதமர் மோடியை போலவே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள கேது ஸ்தலம் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். 


பிரதமர் மோடியின் வாரணாசி உள்பட.. 57 தொகுதிகளில்.. விறுவிறு இறுதிக் கட்ட வாக்குப் பதிவு!



புதுச்சேரியில் உள்ள பழமையான சிவன் கோயிலுக்கு சென்ற அண்ணாமலை 108 சிதறு தேங்காய் உடைத்து சாமி தரிசனம் செய்ததுடன், அங்கு சிறிது நேரம் தியானமும் செய்துள்ளார். 


அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை வழிபாடு செய்துள்ளார். இவ்வாறாக, தமிழகத்தில் உள்ள பல கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.  பிரதமர் மோடி பாணியை பின்பற்றி பாஜக  மாநிலத்தலைவர் அண்ணாமலையும் சாமி தரிசனம் செய்து வருவது, தேர்தலில் வெற்றி பெற வேண்டி தான் இந்த சாமி தரிசனங்கள் எல்லாம் நடப்பதாக தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

news

தமிழாசிரியர் பணி.. இந்தி, சமஸ்கிருதம் எப்படி விரும்பத்தக்க தகுதியாக முடியும்?... சு.வெங்கடேசன்

news

என்னா சேட்டை பாருங்க.. சத்துணவு முட்டையை வைத்து ஆம்லேட் போட்ட திருச்சி ஹோட்டல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்