டில்லி : கேரளா, பீகார், ஒடிசா உள்ளிட்ட ஒரு 5 மாநிலங்களின் கவர்னர்களை மாற்றி உத்தரவிட்டுள்ளார் ஜனாதிபதி திரெளபதி முர்மு.
கேரளா, பீகார், ஒடிசா, மணிப்பூர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் கவர்னர்களை மாற்றி ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, பீகார் கவர்னராக இருக்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், கேரள மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல் கேரள மாநில கவர்னராக இருக்கும் ஆரிப் முகமது கான், பீகார் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒடிசா கவர்னராக இருக்கும் ரகுபர் தாஸின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார். மிசோரம் மாநில கவர்னராக இருக்கும் ஹரிபாபு, ஒடிசா மாநிலத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங், மிசோரம் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர் கவர்னராக முன்னாள் உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா நியமிக்கப்பட்டுள்ளார். '
ஆளுநர் மாற்றத்தில் தமிழ்நாடு இடம்பெறவில்லை. இதற்கு முன்பு நடந்த ஆளுநர் மாற்றத்தின் போதும் தமிழ்நாடு ஆளுநராக இருக்கும் ஆர்என் ரவி இட மாற்றம் செய்யப்படவில்லை. பதவிக்காலம் முடிந்த பிறகும் கூட தொடர்ந்து அவர் அப்பதவியில் நீடித்து வருகிறார். இன்று தான் பிரதமர் நரேந்திர மோடி ஆர் என் ரவி சந்தித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வாகா எல்லையை மூட மத்திய அரசு உத்தரவு.. பாகிஸ்தானுடனான சிந்து நதி ஒப்பந்தம் அதிரடி ரத்து!
பஹல்காம் தாக்குதலுக்கு விரைவில் சரியான பதிலடி தரப்படும்.. அமைச்சர் ராஜ்நாத் சிங்
சையத் ஆதில் ஹுசைன் ஷா.. மக்களைக் காக்க தீவிரவாதியுடன் மோதி.. உயிர் நீத்த குதிரைப்பாகன்!
பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும்: விசிக தலைவர் திருமாவளவன்!
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில்.. உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி..!
இந்திய உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது..?காஷ்மீர் தாக்குதலுக்கு சீமான் கண்டனம்..!
காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு.. மத்திய அமைச்சர் அமித்ஷா அஞ்சலி!
அமலாக்கத் துறையின் டாஸ்மாக் ரெய்டுக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு தள்ளுபடி!
Pahalgam Terror Attack: தேனிலவு சென்ற இடத்தில்.. உயிரிழந்த கடற்படை அதிகாரி..!
{{comments.comment}}