தமிழ்நாட்டில் மீன்பிடி தடைகாலம் .. ஏப்ரல் 15ம் தேதி முதல் அமல்

Apr 13, 2024,01:22 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இரண்டு மாத மீன்பிடி தடைக்காலம் ஆரம்பமாக உள்ளது. ஏப்ரல்  15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை இந்த தடைக்காலம் 61 நாட்கள் கடைபிடிக்கப்படும்.


கிழக்கு கடற்கரைப்பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தைக் கருத்தில் கொண்டு மீன்வளத்தை  பாதுகாக்கும் பொருட்டு 61 நாட்கள் மீன்பிடித்தடைக்காலம் கொண்டு வரப்பட்டு. அமல்படுத்தப்படுகிறது கும். மத்திய அரசு ஆண்டுதோறும் இந்த தடையை விதித்து வருகிறது. மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து, இனப்பெருக்கம் செய்யும் காலம் ஏப்ரல் மற்றும் மே மாதமாகும். 




இந்த மாதத்தில் விசைப்படகுகள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடித்தால் மீன்வளம் குறைந்து விடும் என்பதால், மீன்வளத்துறை மீன்வளத்தை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.அதன்படி,  இந்த ஆண்டிற்கான தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தடைக்காலம் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை அமலுக்கு வருகிறது. இந்த காலங்களில் விசைப்படகுகளில் மீன்பிடிக்க செல்லக் கூடாது என்றும், வல்லம், கட்டுமரம், ஃபைபர் படகுகள்  உள்ளிட்ட நாட்டுப் படகுகளில் மட்டும் மீனவர்கள் கரையோரப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்வர். ஆழ்கடலுக்கு செல்ல அனுமதி முற்றிலும் மாறுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த கால கட்டத்தில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவார்கள். இந்த தடைக்காலத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உட்பட 14 தமிழக கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 15,000 விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி நங்கூரமிடப்பட்டிருக்கும்.  இந்த தடை காலங்களில் மீன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் மீன் விலையும் உயர்ந்தே தான் இருக்கும்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்