மீன்பிடி தடைக்காலம் முடிவடைகிறது.. கடலுக்குள் பாய தயாராகும் படகுகள்.. மீனவர்கள் உற்சாகம்

Jun 14, 2024,10:10 AM IST

சென்னை:   தமிழ்நாட்டு கடலோரங்களில் அமலில் இருந்து வந்த மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது. இதையடுத்து கடலுக்குள் செல்ல மீனவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.


தமிழ்நாட்டு கடல் பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக அமலில் இருந்து வந்த மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 60 நாட்கள் இந்த தடை விதிக்கப்படுவது வழக்கம். இந்த சமயத்தில் மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் இந்த சமயத்தில் மீன் பிடி தடை விதிக்கப்படுகிறது.




திருவள்ளூர் தொடங்கி ராமாநாதபுரம் மாவட்டம் வரையிலும் இந்த மீன் பிடிதடைக்காலம் அமலில் இருக்கும். கடந்த இரண்டு மாதங்களாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்த மீனவர்கள் மீன்பிடித்தடை காலம் இன்றுடன் முடிவடைவதால் மீண்டும் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல உள்ளனனர். படகுகளை பழுது பார்ப்பது, மீன்பிடி வலைகளை சரி செய்வது உள்ளிட்ட பணிகளில் அவர்கள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.


நாளை முதல் மீண்டும் ஆழ்கடல் மீன்பிடி தொடங்கும். அதாவது  இன்று நள்ளிரவு 12 மணியுடன் தடை முடிவதால் நள்ளிரவுக்கு மேல் கடலுக்குள் செல்ல படகுகள் மற்றும் மீனவர்கள் தயாராகி வருகின்றனர். மீன்பிடி தடைக்காலத்தின் காரணமாக அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்குள் செல்ல உள்ளனர். அதே சமயம் இலங்கை கடற்படையானது தங்களுக்கு எந்தவித இடையூறும் செய்யாமல் இருக்க வேண்டும் என்று ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்