டெல்லி: 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 24ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் புதிய எம்.பிக்கள் பதவியேற்பு நடைபெறும். தற்காலிக சபாநாயகர் புதிய எம்.பிக்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
இந்தத் தகவலை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
புதிய எம்.பிக்கள் பதவியேற்பு முடிந்ததும், லோக்சபா சபாநாயகர் தேர்தலும் நடைபெறும். புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டதும், அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து அவரை அவரது இருக்கையில் அமர வைப்பார்கள். அதன் பின்னர் குடியரசுத் தலைவர் உரை இடம் பெறும். ஜூன் 27ம் தேதி குடியரசுத் தலைவரின் உரை இடம் பெறும். மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்துவார். ஜூலை 3ம் தேதியுடன் கூட்டத் தொடர் நிறைவு பெறும்.
இதேபோல ராஜ்யசபாவின் 264வது கூட்டத் தொடர் ஜூன் 27ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி முடிவடையும் என்றும் அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் நிச்சயம் அனல் பறக்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே எக்சிட் போல் சமயத்தில் பங்குச் சந்தையில் ஏற்பட்ட பெரும் உயர்வு மற்றும் தேர்தல் நாளில் ஏற்பட்ட சரிவு குறித்து காங்கிரஸ் கட்சி பரபரப்பான புகாரை வைத்துள்ளது. அதேபோல நீட் தேர்வு குறித்தும் நாடாளுமன்றத்தில் பேசுவேன் என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறார். எனவே எதிர்க்கட்சிகள் தரப்பில் புயலைக் கிளப்பக் காத்துள்ளனர். எனவே மக்களவையின் முதல் கூட்டத் தொடரிலேயே சூறாவளிக்கு வாய்ப்பிருக்கிறது.
மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்
காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!
ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!
அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!
Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!
"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!
மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!
{{comments.comment}}