உருகி உருகி காதலித்த ஏகே.. பிடி கொடுக்காத அடினா.. அம்பலப்பட்ட இஷ்.. கடைசியில் கல்யாணமே புஸ்!

May 31, 2024,02:33 PM IST

ஜகார்த்தா:  "நானும் பார்க்கத்தாண்டி  பொம்பளை".. அப்படின்னு ஒரு படத்தில் கோவை சரளாவுடன், சண்டை போடுவார் வடிவேலு.. அந்த மாதிரி ஒரு காமெடி இந்தோனேசியாவில் அரங்கேறியுள்ளது.


முன்பெல்லாம் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயமிக்கப்பட்டன.. ஆனா இப்பெல்லாம் அப்படி இல்லை.. சோசியாவில் மீடியாவில்தான் பல காதல்களும், கல்யாணங்களும் பிக்ஸ் ஆகின்றன.. அப்படியே மிக்ஸ் ஆகின்றனர்.. இதில் பல தோல்வியில் முடிந்து ஆளுக்கு ஒரு பக்கம் எஸ்ஸும் ஆகி விடுகின்றனர்.. அந்த வகையில் ஒரு வினோதமான கல்யாணம் இந்தோனேசியாவில் நடந்துள்ளது. 


ஏகே யும் அடினாவும் காதல்




சமூக வலைதளத்தில் காதலித்த அடினா கன்சா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஏ கே என்ற இளைஞர் திருமணமான 12 நாட்களுக்குப் பிறகு தன் மனைவி, பெண்ணை கிடையாது,   பக்கா ஆண் என தெரியவந்தால் அதிர்ச்சி அடைந்தார்.. அவரது நிலை ரொம்ப டெலிகேட் ஆகிப் போய் விட்டது!


சமீபகாலமாக சோசியல் மீடியா பயன்பாடு என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புழங்கும் இடமாக மாறியுள்ளது.  சோசியல் மீடியா பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கிட்டத்தட்ட அதற்கு பலரும் அடிமையாகி விட்டோம். அப்படி இந்த சோசியல் மீடியா மூலம் விசித்திரமான வினோதமான சம்பவங்கள் எல்லாம் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக காதல், திருமணம், மோதல், சண்டை, பணம் பறித்தல் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகமாகி வருகிறது.


விழுந்து விழுந்து காதல்




அப்படி இந்தோனேசியாவில் சோசியல் மீடியா மூலம் காதலித்த ஒருவரை கரம் பிடித்து இப்போது தலையில் கை வைத்து உட்கார்ந்திருக்கும் சம்பவம் வேகமாக பரவி வருகிறது.  25 வயதான ஏ கே என்ற இளைஞர் அடினா கன்சா என்ற பெண்ணை சோசியல் மீடியா மூலம் பழகி வந்தார். நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மலர்ந்தது. இவர்கள் இருவரும்  ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். அவ்வப்போது  காதலியை சந்திக்க வேண்டும் என காதலன் சொன்ன போதெல்லாம் காதலி பர்தா அணிந்து கொண்டே அவரை சந்தித்து வந்துள்ளார்.


காதலி பர்தா அணிந்து வருவது இஸ்லாமிய மதத்திற்கு உரித்தானது என்பதால் காதலியின் முகத்தை பார்க்க வேண்டும் என ஏ கே நினைக்கவில்லை. மரபுகளை கடைப்பிடிக்கும் அருமையான குடும்பப் பெண் என்றே அவர் நினைத்துள்ளார். காதல் முற்றி கல்யாணமும் செய்து கொள்ள முடிவெடுத்தார் ஏகே. அப்போது அந்தப் பெண் தனக்கு உறவினர்கள் யாரும் இல்லை. அம்மா அப்பா உயிருடன் இல்லை எனக் கூறியுள்ளார். இதையடுத்து கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி வீட்டிலேயே வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.


முகத்தைக் காட்டேன் அன்பே




அதான் கல்யாணம்தான் முடிஞ்சு போச்சே.. இனியாவது முகத்தைப் பார்க்கலாம் என்று பரவசமாக காத்திருந்தார் ஏகே.. ஆனால் திருமணம் முடிந்த பிறகும் கூட அடினா தன் முகத்தை ஏ கேவுக்கு காட்டாமல் மறைத்து வந்துள்ளார். அது மட்டுமல்லாமல் தன் கணவர் நெருங்கி வந்தாலும் கூட ஏதாவது ஒரு காரணம் சொல்லி அவரை விட்டு விலகியே அதிகம் பேசாமலேயே இருந்துள்ளார். 


இதனால் ஏகேவுக்கு குழப்பம் ஏற்பட்டது. அது வலுத்து சந்தேகமாக மாறியது. திருமணம் ஆகி 12 நாட்கள் ஆன நிலையில், மனைவியைப் பற்றி விசாரிக்க முடிவெடுத்தார். அப்போது பல அதிர்ச்சியான விஷயங்கள் தெரிய வந்துள்ளது. அது என்னவென்றால் அடினாவின் பெற்றோர்கள் உயிருடன் தான் இருக்கிறார்கள். அடினா பெண்ணே இல்லை. அவர் ஒரு ஆண். இவருடைய உண்மையான பெயர் இஷ். இவர் கடந்த இருபதாம் ஆண்டு முதல் பர்தா அணிந்து முகத்தை காட்டாமல் பெண் போல் நடித்து ஏகே வை ஏமாற்றியுள்ளார். இதனால் ஏகே கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இஷ் மீது காவல் துறையில்  புகார் கொடுத்தார். 


பார்க்கத்தான் நான் பொம்பளை!




விசாரணையின் அடிப்படையில் இஷ் ஒரு பெண்ணை போல வேடமனிந்தும், பெண்களைப் போல குரலையும் மாற்றி பேசியும் அனைவரையும் நம்ப வைத்து ஏமாற்றியது தெரியவந்தது.  எதற்காக பெண் போல ஏமாற்றினாய் என்று கேட்டபோது, ஏகேவின் சொத்துக்களை அபாகரிக்கவே  பெண் வேடம் அணிந்து காதலிப்பது போல நடித்து கல்யாணமும் செய்ததாக தெரிவித்துள்ளார்.


ஏம்ப்பா தம்பி ஏகே.. உருவம்தான் பெண் போல இருந்துச்சு .. சரி நம்புற மாதிரிதான் இருக்கு.. குரல்ல மாற்றம் தெரிஞ்சிருக்குமே.. அதைக் கூடவாய்யா ராசா உன்னால கண்டுபிடிக்க முடியலை!!... காதலர் தினம் படத்தில் வரும் கவுண்டமணி போல அன்பே டயானா என ஃபேக் ஐடி சின்னி ஜெயந்த்தை உருகி உருகி காதலித்து கடைசியில் ஏமாந்தது போல இப்போது நிலைகுலைந்து போய் உட்கார்ந்திருக்கிறார் ஏகே!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்