மணிப்பூரில் நிர்வாணப்படுத்தப்பட்ட பெண்களில் ஒருவர்.. கார்கில் ஹீரோவின் மனைவி!

Jul 21, 2023,03:36 PM IST
டெல்லி: மணிப்பூரில்  மெய்தி இன வெறியர்களிடம் சிக்கி நிர்வாணப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டு கொடுமைக்குள்ளாக்கப்பட்ட பெண்கள் இருவரில் ஒருவர், முன்னாள் ராணுவ வீரரின் மனைவி என்று தெரிய வந்துள்ளது.

இந்த ராணுவ வீரர் கார்கில் போரில் பங்கேற்றவர் ஆவார். கார்கில் ஹீரோவின் மனைவிக்கே இந்த கதியா என்று நாடே அதிர்ந்து போய் நிற்கிறது.

மணிப்பூர் அவலத்தை யாராலுமே இன்னும்  ஜீரணிக்க முடியவில்லை. அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரவே முடியவில்லை.  மனதைப் போட்டு உலுக்கிக் கொண்டிருக்கின்றன அந்த குரூர காட்சிகள். இந்த சம்பவம் தொடர்பாக  தொடர்ந்து அடுக்கடுக்காக பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.



அந்த வன்முறை வெறியாட்டத்தின்போது இரண்டு இளம் பெண்களை நிர்வாணப்படுத்தியும், பாலியல் ரீதியாக குரூரமாக நடந்து கொண்டும் தெருத் தெருவாக அழைத்துச் சென்றது அந்தக் கும்பல். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரின் கணவர்  முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர் அஸ்ஸாம் ரெஜிமென்ட் பிரிவில் சுபேதாராக பணியாற்றியவர். கார்கில் போரில் பங்கேற்ற வீரரும் கூட.

இவர் தனது மனைவிக்கு நேர்ந்த கதி குறித்து உள்ளூர் சானலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், கார்கில் போரில் கலந்து கொண்டு எனது நாட்டை நான் காப்பாற்றினேன். இலங்கையிலும் கூட  நான் இந்திய அமைதி காக்கும் படையில் ஈடுபட்டு பணியாற்றியுள்ளேன்.  எனது தேசத்தை காப்பாற்ற முடிந்தது. ஆனால் என்னால் எனது மனைவியின் மானத்தைக் காப்பாற்ற முடியவில்லை.  எனது சொந்த கிராமத்தைக் காப்பாற்ற முடியவில்லை.

மே 4ம் தேதி காலை, ஒரு பெரிய கும்பல் கிராமத்துக்குள் புகுந்து வீடுகளை தீவைத்து கொளுத்தியது. பெண்கலை எல்லாம் அவர்கள் மானபங்கப்படுத்தினர்.  எனது மனைவி உள்ளிட்ட இரண்டு பெண்களையும் பிடித்து ஆடைகளை எல்லாம் அவிழ்த்து நிர்வாணமாக நிறுத்தி வைத்தனர்.  அங்கு அப்போது போலீஸார் இருந்தனர். ஆனால் யாருமே தடுக்கவில்லை. 

வீடுகளை எரித்தவர்களை, பெண்களை மானபங்கப்படுத்தியவர்களை ஒருவரை கூட விடக் கூடாது. அத்தனை பேருக்கும் மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று குமுறியுள்ளார் அந்த முன்னாள் ராணுவ வீரர்.

சமீபத்திய செய்திகள்

news

CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!

news

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

அதிகம் பார்க்கும் செய்திகள்